முதல் மனைவியின் நினைவால் உருகி தவிக்கும் சரத்குமார்.. அப்ப ராதிகாவோட நிலைமை..!

Author: Vignesh
22 January 2024, 4:49 pm
sarathkumar-updatenews360
Quick Share

தமிழ் சினிமாவில் மூத்த நடிகர்களில் ஒருவரான சரத்குமார் திரைப்பட நடிகர் மற்றும் தமிழ்நாட்டு அரசியல்வாதியாக இருந்து வருகிறார். ஆரம்பத்தில் வில்லன் வேடங்களில் நடித்து பிரபலமானவராக அறியப்பட்ட இவர் பின்னாளில் சூரியன் படத்தில் முதன்மை வேடத்தில் நடித்து சிறப்பு கவனம் பெற்றார்.

திரைத்துறைக்கு வருவதற்கு முன்னரே சாயாதேவி என்பவரைக் காதலித்து திருமணம் செய்துக்கொண்ட சரத்குமார் வரலட்சுமி, பூஜா என்னும் இரு மகள்கள் பெற்றார் . அதன் பின்னர் அவர் சினிமாவில் நடித்த போது நடிகை நக்மாவுடன் ஏற்பட்ட காதலால் மனைவி சாயாதேவி அவரை விவாகரத்து செய்துவிட்டார். அதன் பின்னர் நடிகை ராதிகாவை முறைப்படி இரண்டாம் திருமணம் செய்துக்கொண்டார். தற்போது முன்னாள் மனைவியுடன் நட்பாக பழகி வருகிறார் சாத்குமார்.

இந்நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சரத்துகுமார் தனது முதல் மனைவி குறித்து பேசியுள்ளார். கடவுள் எங்கள் குடும்பத்தின் மீது கருணையுடன் இருக்கிறார். வரலட்சுமியின் அம்மாவை விவாகரத்து செய்த போதும், அவர் எங்களுடன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்.

வரலட்சுமி நீ உன் அப்பாவிடம் பேசக்கூடாது என்றெல்லாம் சொல்லவில்லை. தற்போது நாங்கள் நண்பர்களாக பயணிக்கிறோம். எல்லோரும் ஒன்றாக இருப்பதை பார்ப்பதற்கு சந்தோஷமாக இருக்கிறது. ஆரம்பத்தில், வரலட்சுமியும் ராதிகாவும் பழகும் போது சின்ன சின்ன பிரச்சனைகள் இருந்தது உண்மைதான். தற்போது, இருவரும் நல்ல நண்பர்களாக மாறிவிட்டார்கள் என்று சரத்குமார் தெரிவித்துள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்திருந்தது நிலையில், ரசிகர்களோ அப்பொழுது முதல் மனைவி மேல் இன்னும் காதல் இருக்கு அப்ப ராதிகாவோட வாழ்க்கை அதோகதி தானா இன்று கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Views: - 330

0

0