அம்பானி கூப்பிட்டதும் மும்பைக்கு ஓடிய நயன்தாரா… அப்போ என்ன பார்த்தா எப்புடி தெரியுது? கடுங்கோபத்தில் ஷாருக்கான்!

Author: Shree
21 September 2023, 10:20 am
nayanthara
Quick Share

மலையாள குடும்பத்தை சேர்ந்தவரான நயன்தாரா தமிழில் ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்னர் சந்திரமுகி திரைப்படம் மூலம் பிரபலமானார். பின்னர் தொடர்ந்து சில சறுக்கலை சந்தித்தபின் அவரை தூக்கி உச்சத்தில் அமர வைத்த திரைப்படம் பில்லா. அப்படத்தில் பிகினி உடையில் கவர்ச்சி தெறிக்க கிளாமர் காட்டி சொக்கி இழுத்தார்.

பின்னர் சொந்த வாழ்க்கையில் காதல், ஏமாற்றம், பட வாய்ப்பு இல்லாமை என இருந்து வந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு ஹிட் கொடுத்த திரைப்படம் நானும் ரவுடி தான். அப்படத்தில் காது கேளாத பெண்ணாக சிறப்பாக நடித்திருந்தார். அப்படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.

பின்னர் வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றார் நயன்தாரா. அவ்வப்போது குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட அழகான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரது கவனத்தையும் ஈர்ப்பார். மகன்களுக்கு “உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வேக் N சிவன் ” என தன் பெயரையும் நயன்தாரா பெயரையும் உயிர் , உலகம் என்பதன் அடிப்படையில் வைத்துள்ளனர்.

தொடர்ந்து சில சிக்கல், படுதோல்விகள், கணவருக்கு கைநழுவிப்போன வாய்ப்புகள் என சோகத்தில் மூழ்கிய நயன்தாரா கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்து தொடர்ந்து வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார். ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

நயன்தாரா என்னதான் முன்னனி நடிகையாக இருந்தாலும் அவர் படங்களில் நடித்தோடு சரி ப்ரோமோஷன்களில் கலந்துக்கொள்ளவே மாட்டார். பாலிவுட்டின் நட்சத்திர நடிகர் ஷாருக்கானின் ஜவான் படத்தின் விளம்பரத்திற்கே வராத நயனதாரா தற்போது அம்பானி வீட்டு விழாவில் தன் கணவரோடு பங்கேற்றுள்ளார். ஆம் அம்பானி குடும்பம் விநாயகர் சதுர்த்தியை திரை நட்சத்திரங்களை அழைத்து வெகு விமர்சியாக பூஜை செய்து கொண்டாடினர். அந்த விழாவிற்கு மட்டும் அம்பானி கூப்பிட்டார் என்பதற்காக மும்பைக்கு பறந்து சென்றுள்ளார். இதனால் ஷாருக்கான் நயன்தாரா மீது கடுங்கோபத்தில் இருக்கிறாராம்.

Views: - 754

9

0