16 வயது சிறுவன் உடன் உறவு வைத்திருந்த சிம்ரன்…? திடுக்கிடும் தகவல்!

Author: Shree
3 July 2023, 9:13 am
simran
Quick Share

ஒல்லி பெல்லி இடுப்பழகியாக ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவையும் தன் இடுப்பசைவால் ஆட்டி படைத்தவர் நடிகை சிம்ரன். மும்பை பஞ்சாபி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவர் நிகழ்ச்சி தொகுப்பாளராக சினிமாத்துறையில் அறிமுகமானார்.

1995-இல் அவர் நடித்த முதல் படமான சனம் பெருந்தோல்வியை அடைந்தது. அதன் பின்னர் இந்தியை தவிர மற்ற மொழிகளில் கவனம் செலுத்தி மலையாளத்தில் மம்முட்டியுடன் இந்திரபிரஸ்தம், கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் சிம்ஹடா மாரி படத்திலும் அப்பாய் காரி பெல்லி என்ற தெலுங்குப் படத்திலும் நடித்தார்.

தமிழில் 1997 ஆம் ஆண்டு ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இங்கு முதல் படமே சூப்பர் ஹிட் அடித்தது. பின்னர் நேருக்கு நேர், துள்ளாத மனமும் துள்ளும், வாலி , ஜோடி , பிரியமானவளே , பஞ்சதந்திரம் , கன்னத்தில் முத்தமிட்டால் , வாரணம் ஆயிரம் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்தார்.

பின்னர் தீபக் பக்கா எனபவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நடிகை சிம்ரன் டாப் நடிகையாக மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோது கிச்சா வயசு 16 என்ற படத்தில் 16 சிறுவனுடன் உறவில் இருப்பது போன்ற சர்ச்சையான காட்சியில் நடித்திருந்தார்.

ஆனால், அந்த சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடிக்க சிம்ரனுக்கு கொஞ்சம் கூட விருப்பமே இல்லையாம். இதனால் அப்படத்தின் ஷூட்டிங்கின் போது அவர் சரியான ஒத்துழைப்பு தரவில்லையாம். இருப்பினும் இயக்குனர் எடுத்திருந்த சில காட்சிகளை வைத்து படத்தை ரிலீஸ் செய்தார். இதனால் கோபம் அடைந்த சிம்ரன் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மேல் புகார் அளித்தார். அதன் பின் என்ன ஆனது என தெரியவில்லை என பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

Views: - 3510

3

3