பொம்மை மாதிரி வெச்சிருந்தாங்க.. தென்னிந்திய சினிமாவில் நடிகைகளுக்கு அரங்கேறிய பாலியல் வன்கொடுமை..!

Author: Vignesh
11 August 2023, 10:30 am
heroine-updatenews360
Quick Share

அட்ஜஸ்ட்மென்ட் என்பது தமிழ் சினிமாவில் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மிகப் பெரிய ஒரு சவாலாக இருந்து வருகிறது. அதை தாண்டி எத்தனையோ ஹீரோக்கள் மற்றும் ஹீரோயின்கள், துணை நடிகைகள் தங்கள் நினைத்த லட்சியத்தை அடைந்து இருக்கிறார்கள்.

heroine-updatenews360

பெரும்பாலும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என அவர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்தால் மட்டுமே ஒரு படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் தான் இன்றைய தமிழ் சினிமா இருந்து வருகிறது. இந்த நிலை சினிமாவில் மட்டும் இல்லாமல் அனைத்து துறைகளிலும் இந்த பிரச்சனை நடந்து கொண்டே தான் இருக்கிறது.

heroine-updatenews360

இந்நிலையில், பிரபல திரைப்பட விமர்சகரும், சென்சார் நிபுணருமான உமர் சந்து தென்னிந்திய சினிமா குறித்து ஷாக்கிங் ட்விட் ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து இருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்னிந்திய நடிகர்களை நடிகைகளுடன் தொடர்பு படுத்தி பாலிவுட் விமர்சகர் உமர் சந்து பல்வேறு கருத்துக்களை தனது ட்வீட்டில் கூறி வருகிறார். விஜய், தனுஷ், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களின் ரகசியங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

umair sandhu -updatenews360

மேலும், ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்பதற்காக விமர்சகர் உமைர் சந்து இப்படி அடுத்தவர் வாழ்க்கையில் விளையாடுவதாக நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர். மேலும், உமர் சந்துவிற்கு தென்னிந்திய நடிகர்களை பிடிக்காததால் தான் இது போன்ற தவறான செய்திகளை பதிவிட்டு வருகிறார் என்றும் கூறப்படுகிறது.

heroine-updatenews360

இதனிடையே, 80 90 காலகட்டத்தில் அதிகமாக நடிகைகளுக்கு அட்ஜஸ்ட்மென்ட் தொந்தரவு இருந்ததாகவும், ஆனால் இந்த பிரச்சனைகளை பேச அப்போது மீடியாக்கள் பெரிதாக இல்லை எனவும், இந்நிலையில் இந்தி திரைப்பட விமர்சகர் உமர்சந்து என்பவர் 80 90 காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொந்தரவு இருந்தது. நடிகைகளை பொம்மைகள் போல் நடத்தியுள்ளனர். இது குறித்து மீடியாக்கள் பேச வேண்டும் என ட்வீட் செய்துள்ளார்.

Views: - 344

0

0