ஜோதிகாவின் மகுடிக்கு பம்பாயில் பாம்பாட்டம் ஆடுறான்…. புகைச்சலில் புலம்பும் சிவகுமார்!

Author: Rajesh
8 January 2024, 7:06 pm
surya sivakumar
Quick Share

புஷ் புஷ் நடிகையாக கொழுக் மொழுக் அழகியாக அக்கட தேசத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு நடிக்க வந்தவர் நடிகை ஜோதிகா. இந்தி சினிமாவில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த ஜோதிகா வாலி படத்தில் காமியோ ரோலில் நடித்து அறிமுகமானார் .

முதல் படத்திலே நல்ல அறிமுகத்தை பெற்ற அவர் தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார், சிநேகிதியே, குஷி, பூவெல்லாம் உன் வாசம், பிரியமான தோழி, தூள், காக்க காக்க, மன்மதன், பேரழகன், சந்திரமுகி, சில்லுனு ஒரு காதல் இப்படி பல்வேறு ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

jyothika

காக்க காக்க படத்தில் நடித்த போது நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். சிவகுமாருக்கு தன் மகன் ஒரு நடிகையை திருமணம் செய்வதில் விருப்பமே இல்லையாம். தன் ஜாதியில் பெண் எடுத்து திருமணம் செய்யவேண்டும் என எண்ணியதாகவும் அது நடக்காததால் மிகவும் வருத்தப்பட்டதாக சிவகுமாரே பேட்டி ஒன்றில் கூட கூறியிருந்தார்.

அதன் பின்னர் தன்னுடைய இளைய மகன் கார்த்திக்கு தன் இஷ்டப்படி தன் சாதிக்கார பேனையே திருமணம் செய்துவைத்து நிம்மதி அடைந்தார். இதையெல்லாம் மனதில் வைத்து சரியான நேரம் பார்த்து பழிவாங்க எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த ஜோதிகா மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

சரி போனால் போகட்டும் என விட்ட சிவகுமாருக்கு மீண்டும் பெரிய இடி கொடுத்தார் ஜோதிகா. ஆம், சூர்யாவை கூட்டிக்கொண்டு தான் பிறந்த மண்ணான மும்பையில் சென்று செட்டில் ஆகிவிட்டார். இதனால் சிவகுமார் செம கோபத்தில் இருக்கிறாராம். இருந்தாலும் அவரால் ஒண்ணுமே செய்யமுடியவில்லையாம். காரணம் சூர்யா ஜோதிகா பேச்சை தட்டாமல் அவர் சொல்வதே மந்திர வாக்காக நினைந்து இந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிவருகிறார்.

sivakumar

மும்பைக்கு சென்று இந்தி படங்களில் நடிப்பது மட்டும் அல்லாமல் சூர்யா தேவையில்லாத பல புதிய தொழில்களை கையில் எடுத்து அதில் முதலீடு செய்து வருகிறாராம். இது சிவகுமாருக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லையாம். இந்நிலையில் ஐ எஸ் பி எல் என்ற கிரிக்கெட் விளையாட்டின் சென்னை அணியை சூர்யா பலகோடி கொடுத்து விலைக்கி வாங்கி இருக்கிறாராம். இது சிவகுமாருக்கு பிடிக்கவில்லையாம். ஆனால், மனைவி ஜோதிகா சொல்லித்தான் சூர்யா இது போன்ற வேலைகளை செய்கிறார் என்றும் குடும்பத்தில் எந்த விஷயத்திலும் கலந்துக்கொள்ளவில்லையாம். ஜோதிகாவின் மகுடிக்கு பம்பாயில் பாம்பாட்டம் ஆடுறான் என உறவுக்காரர்களிடம் சொல்லி புலம்பி வருகிறாராம் சிவகுமார்.

Views: - 277

0

0