ஜெயிலில் இருக்கும்போது அந்த ஆசை… 3 மாதம் லிவிங் டுகெதர் – கூச்சமில்லாமல் கூறிய TTF வாசன்!

Author: Shree
15 November 2023, 8:57 pm
TTF VASAN
Quick Share

Twin throttlers என்ற யூடியூப் சேனலை கோவையை சேர்ந்த டிடிஎப் வாசன் என்ற இளைஞர் நடத்தி வருகிறார். இவர் விலை உயர்ந்த பைக்கை கொண்டு சாகசங்கள் செய்து, அதனை வீடியோவாக பதிவிட்டு 2″கே கிட்ஸ் மத்தியில் பிரபலமடைந்துள்ளார்.

சமூக வலைதளங்களில் பிரபலமான டிடிஎஃப் வாசன் போக்குவரத்து விதிகளை மீறியதால் புகாரியில் சிக்கி பிரபலமானது தான் அதிகம் என்று சொல்லலாம். அந்த வகையில், சமீபத்தில் இயக்குனர் செல்லம் இயக்கத்தில் மஞ்சள் வீரன் என்ற படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார்.

ttf vasan

அதற்கான போஸ்டரும் சமீபத்தில் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வைரலானது. பட்ஜெட் ஃபிலிம் கம்பெனி மற்றும் டாக்டர் கவிதா பிரியதர்ஷினி தயாரிப்பில் உருவாகும் மஞ்சள் வீரன் படத்திற்காக TTF வாசன் சுமார் 1.8 கோடி சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியானது.

இதனிடையே, படம் ஆரம்பித்து சில நாட்களில் TTF வாசனின் கார் பைக்கில் சென்ற ஒரு நபரின் மீது மோதி சர்ச்சையாகி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், TTF தன்னுடைய பைக்கில் வேகமாக சென்று வீலிங் அடிக்க முயன்றுள்ளார். அப்போது, நிலைதடுமாறி பயங்கர விபத்தில் சிக்கினார். வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

ttf vasan- updatenews360

இருபது லட்ச ரூபாய் பைக்கை ஓட்ட 3 லட்சம் ரூபாய்க்கு பாதுகாப்பு உடை மற்றும் ஹெல்மெட் அணிந்திருந்ததால் உயிர்த்தப்பினார் டிடிஎஃப் வாசன். ஆபத்தை விளைவிக்கும் வகையில், வண்டி ஓட்டியதாக இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுவரை இரண்டு முறை ஜாமீன் கேட்டும் டிடிஎஃப் வாசன் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

மூன்றாவது முறையாக சென்னை உயர்நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் ஜாமீனுக்கு மனு அளித்து இருந்தார். இந்த விசாரணை நடைபெற்று வந்த நிலையில் புழல் சிலையில் இருந்து சமீபத்தில் வெளியில் வந்துள்ள TTF வாசன், தவறை நினைத்து திருந்தி அமைதியான வாழ்க்கை வாழாமல் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி பேட்டி கொடுத்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய TTF வாசன், நான் ஜெயிலில் இருந்தபோது எனக்கு திருமண ஆசை வந்தது என்றும் அதனால் 3 மாதம் லிவிங் டுகெதரில் வாழ்ந்து அதன் பின்னர் திருமணம் செய்துக்கொள்ளவேண்டும் என்று முகம் சுளிக்கும் வகையில் தனது கொச்சையான ஆசையை கூறி சர்ச்சை கிளப்பியுள்ளார். இவர் ஜெயிலுக்கு சென்றும் திருந்தவில்லையே என பலர் அவரை விமர்சித்துள்ளனர்.

Views: - 232

0

0