உதவி இயக்குனர்களை அடித்து படுத்துறார்… மாரி செல்வராஜ் மீது குவியும் அடுக்கடுக்கான புகார்!

Author: Shree
22 June 2023, 4:37 pm
mamanan
Quick Share

தமிழ் சினிமாவின் மிகவும் திறமை வாய்ந்த கலை நுணுக்கம் அதிகம் தெரிந்து முறையாக திரைப்படம் எடுக்கும் சிறந்த இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். இவர் பல்வேறு புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். பிரபல இயக்குனரான ராமிடன் உதவி இயக்குனராக சுமார் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்திருக்கிறார்.

அவரிடம் திரை நுணுக்கங்களை கற்றுத்தெறிந்து திரைத்துறையில் இயக்குனராக அவதாரம் எடுத்தார். பிரபல வார இதழ் பத்திரிகையான “மறக்க நினைக்கிறேன்” என்ற தொடரை எழுதியுள்ளார். தமிழில் பெரியேறும் பெருமாள் படத்தை இயக்கி மாபெரும் வெற்றிப்படைத்தார். திருநெல்வேலிக்குப் அருகில் இருக்கும் புளியங்குளம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயத்தை தொழிலாக கொண்ட பெற்றோருக்கு பிறந்த மாரி செல்வராஜ் கிராமங்கள் சார்ந்த படங்களை இயக்குவதிலேயே ஆர்வமிக்கவராக இருக்கிறார்.

இவர் தனுஷை வைத்து கர்ணன் படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு தற்போது மாமன்னன் படத்தை இயக்கி வருகிறார். உதயநிதி ஸ்டாலின் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இந்நிலையில் மாரி செல்வராஜ் கமலின் தேவர்மகன் படம் சாதி ஆதிக்கத்தை கொண்டு எடுக்கப்பட்டதாக கூறி கமல் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார். அப்போ நீ எடுத்த பரியேறும் பெருமாள், கர்ணன் எல்லாமே அப்படி எடுத்து தானே? என அவரை திட்டி தீர்த்து வருகிறார்கள்.

மேலும் பாபநாசம் படத்தை ஒழுங்காக பார்க்காமலே அதை விமர்சித்தள்ள பழைய வீடியோ நெட்டிசன்ஸ் வச்சி செய்துள்ளனர். இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு மாமன்னன் குறித்து பேட்டியளித்துள்ள உதயநிதி ஸ்டாலின்
ஷூட்டிங்கில் மாரி செல்வராஜ் அதிகமாக கோபப்படுவார். அத்தோடு உதவி இயக்குனர்களை கண்ணாபின்னானு திட்டி அடிப்பார், கத்துவாரு… ஷூட்டிங் ஸ்பாட்டே ஒரு போர்களமாதிரி இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதையெல்லாம் வைத்து பார்த்தால் மாரி செல்வராஜ் ரெண்டே ரெண்டு ஹிட் படத்தை மட்டும் கொடுத்துவிட்டு ஆணவத்தால் ஆடுகிறார் என விமர்சித்துள்ளனர். இதற்கு முன்னர் கூட பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த நெல்லை தங்கராஜை அடித்து கொடுமைப்படுத்தி நடிக்க வைத்த விவகாரம் பெரியளவில் பேசப்பட்ட நிலையில் இந்த செய்தி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Views: - 273

0

1