என் தப்பு தான்… தேசிய விருது வென்ற படத்தில் நடிக்காமல் போன விஜய் : இப்ப வருத்தப்பட்டு என்ன பண்றது!!

Author: Udayachandran RadhaKrishnan
10 December 2022, 2:06 pm
Vijay - Updatenews360
Quick Share

சினிமாவில் பல படங்கள் வெற்றி வாகை சூடியதுண்டு.. அப்படிப்பட்ட படங்களல் முன்னதாக ஒரு சிலர் கமிட் ஆகியிருக்கலாம் அல்லது கதையை கேட்டுவிட்டு பின்னர் கால்ஷீட்பிரச்சனையால் வெளியேறியிருக்கலாம்,

அப்படிப்பட்ட ஒரு சூப்பர் டூப்பர் படம்தான் ஆட்டோகிராப். சும்மா சொல்லக்கூடாது, படத்தில் இயக்குநர் சேரன் வாழ்ந்திருப்பார். படமும் 6 தேசிய விருதுகளை அள்ளியது.

இந்த படத்துக்கு பின்னர் முழு நடிகராக மாறினார் இயக்குநர் சேரன். பின்னத் தவமாய் தவமிருந்து, பொக்கிஷம், பிரிவோம் சந்திப்போம் போன்ற படங்களில் நடிக்கவும் செய்தார்.

ஆனால் அவருக்கு கதாநாயகன் வாய்ப்பு குறையத் தொடங்கியது. என்னதான் ஆட்டோகிராப் படத்தை அவரே இயக்கி நடித்திருந்தாலும், அந்த படத்துக்காக மூன்று ஹீரோக்களிடம் கதையை சொல்லியுள்ளர்.

முதலில் அவர் சந்தித்து விஜய். அவரும் ஒகே சொல்ல, கால்ஷீட் பிரச்சனையால் படம் பண்ண முடியவில்லை. பின்னர் விக்ரம், சூர்யா என கதையை சொல்லி காத்திருந்து கடைசியல் அவரே இறங்கி நடிக்க தொடங்கினார். படம் வெளியான பின், நடிகர்கள் இந்த படத்தை மிஸ் செய்துவிட்டோம் என வருத்தப்பட்டனர்.

இந்த நிலையில் யூடியூப்பில் பேட்டிக் கொடுத்த சேரன், ஆட்டோகிராப் படத்துக்கு பின் விஜய் என்னை அழைத்து இரண்டு கதைகளை கேட்டார். நானும் 2 மணி நேரம் கதையை சொன்னேன். படக்கதையை கேட்டு ஓகே சொன்னார்.

ஆனால் நான் தவமாய் தவமிருந்து இயக்கியதால், தாமதமாகிவிட்டது. விஜய்யும் வேறு படத்தில் நடிக்க சென்றுவிட்டார். அதன் பின் அவரை சந்திக்கவில்லை. என் தப்புதான் நான்தான் அவரை சந்தித்திருக்கணும் என கூறி வருத்தப்பட்டார்.

Views: - 657

10

7