அயலான் படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்தது ஏன்? மனம்திறந்த சிவகார்த்திகேயன் -Touching பதில்!

Author: Shree
7 October 2023, 1:04 pm
sivakarthikeyan
Quick Share

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் stand-up காமெடியன் ஆகவும், மிமிக்கிரி செய்தும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், சில குறும்படங்களில் நடித்தார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பேச்சின் மூலம் மக்கள் முதல் பிரபலங்கள் வரை பரிச்சயம் பெற்றார்.

பின்னர், மெரினா, 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் என அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறவே, முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். மேலும், நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் திகழ்ந்து வருகிறார்.

தற்போது சிவகார்த்திகேயன் கைவசம் அயலான் திரைப்படம் உள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகி வரும் இத்திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ராகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, பால சரவணன் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். 2017ம் ஆண்டே துவங்கிய இப்படம் சில பிரச்சனையால் 5 வருடங்களாக ரிலீஸ் ஆகாமல் உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் சம்பளமே வாங்காமல் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் படம் வருகிற ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் சம்பளமே வாங்காமல் நடித்திருக்கிறார். இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் கேட்டதற்கு, “அயலான் படம் பண பிரச்சனையில் சிக்கியதன் காரணமாக பாதியில் நின்றபோது நான் எனக்கு சம்பளம் வேண்டாம் என சொல்லிவிட்டேன். அதற்கு காரணம் ரவிக்குமார் தான். பணத்தை இழந்ததாக நான் நினைக்கவில்லை. இப்படத்தில் நான் ரவிக்குமாரை சம்பாதித்து இருக்கிறேன். அவர் தான் எனக்கு பெரிய சொத்து என சிவகார்த்திகேயன் பேசினார்.

Views: - 303

1

0