என்ன பண்ணாலும் தோசை மொறுவலாக வரவில்லையா… இத ஃபாலோ பண்ணுங்க போதும்!!!
22 January 2021, 8:51 amதமிழ்நாட்டில் காலை உணவு என்றாலே இட்லி, தோசை தான். இதற்கு தொட்டுக்கை விதவிதமாக செய்யப்படும். மொறு மொறு தோசையை சுட சுட சாம்பார் மற்றும் சட்னியோடு சாப்பிடும் ருசியே தனி தான். ஆனால் ஒரு சிலருக்கு என்ன தான் டிரை பண்ணாலும் தோசை மொறுவலாக வராது. எனவே இந்த பதிவில் அதற்கான சில டிப்ஸ் பற்றி பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
3 கப் – வெள்ளை அரிசி
1 தேக்கரண்டி – ஆலிவ் எண்ணெய் (ஒரு தோசை வீதம்)
½ கப் – கடலை பருப்பு
¾ கப் – பாசிப்பருப்பு
4 தேக்கரண்டி – வெந்தயம்
செய்முறை:
* ஒரு பெரிய பாத்திரத்தில், வெள்ளை அரிசி, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு சேர்த்து கலக்கவும். இதிலுள்ள கல், தூசிகளை சுத்தம் செய்யவும்.
* பின்னர் வடிகட்டிய தண்ணீரைச் சேர்த்து, கலவையை ஊறவையுங்கள். இது 5 மணி நேரம் ஊற வேண்டும்.
* இப்போது, அரிசி மற்றும் கடலைப்பருப்பை மட்டும் பிளெண்டருக்கு மாற்றவும். அதிக தண்ணீர் பயன்படுத்த வேண்டாம். அரைத்ததும் இதனை ஒரு கிண்ணத்திற்கு மாற்றி ஃப்ரிட்ஜில் வைக்கவும்.
*3 நாட்களுக்குள் இந்த மாவை பயன்படுத்துவதை உறுதிசெய்யுங்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் நீங்கள் அதை வெளியே எடுக்கும்போது, சுமார் ¼ கிளாஸ் தண்ணீரைச் சேர்த்து பயன்படுத்த வேண்டும்.
* இப்போது குறைந்த நடுத்தர தீயில் ஒரு தோசைக்கல்லை வைக்கவும். அது சூடேறியதும், சிறிது குளிர்ந்த நீரைத் தெளித்து உடனடியாக ஒரு துணியால் உலர வைக்கவும்.
* இது தோசைக்கல்லை குளிர்விக்க அனுமதிக்கிறது. இப்போது மாவை ஊற்றி வட்ட வடிவத்தில் பரப்பவும். ஆலிவ் எண்ணெயில் சில துளிகள் சேர்த்து சிறிது பொன்னிறமாகும் வரை சமைக்கவும். மறுபுறம் புரட்டி போடவும். உங்கள் மிருதுவான மொறு மொறு தோசை தயாராக உள்ளது!
0
0