இனி உங்களுக்கு பிடித்த மாதிரியான பெர்ஃப்யூமை வீட்டிலே செய்யலாம்!!!

Author: Hemalatha Ramkumar
2 March 2023, 8:50 am

சிறந்த வாசனை திரவியங்கள் நம்மை நன்றாக உணர வைக்கின்றன. நமது உணர்ச்சிகளைத் தூண்டுகின்றன, நல்ல நினைவுகளை நினைவுப்படுத்துகின்றன. உங்கள் வாழ்க்கையில் சில நிதானமான நறுமணங்களைச் சேர்ப்பது மன அழுத்தமான நாளுக்குப் பிறகு அமைதியாகவும் ஓய்வெடுக்கவும் உதவும் என்று நிபுணர்களும் பரிந்துரைக்கின்றனர். இதனை கடைகளில் தான் வாங்க வேண்டும் என்பதில்லை. உங்கள் மனதை அமைதிப்படுத்த உதவும் DIY வாசனை திரவியத்தை எவ்வாறு செய்வது என பார்க்கலாம்.

உங்கள் தனிப்பட்ட விருப்பங்களுக்கு ஏற்ப உங்கள் வாசனை திரவியங்களுடன் அத்தியாவசிய எண்ணெய்களை சேர்க்கலாம்.

இனிப்பு பாதாம், தேங்காய், அல்லது ஜோஜோபா எண்ணெயில் 6 டீஸ்பூன் எடுக்கவும். இதனோடு இரண்டு தேக்கரண்டி கேரியர் எண்ணெயை சேர்க்கவும். மேலும் 100-ப்ரூஃப் ஆல்கஹால், 2.5 டீஸ்பூன் தண்ணீர், 30 சொட்டுகள் அத்தியாவசிய எண்ணெய்கள் ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கவும். ஒரு வடிகட்டியைப் பயன்படுத்தி காற்று புகாத பாட்டிலில் ஊற்றவும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • interim ban for the verdict that says ar rahman should give 2 crores in copyright issue ஏ.ஆர்.ரஹ்மானுக்கு தடை? திடீரென தீர்ப்பளித்த நீதிமன்றம்! இவருக்கு இப்படி ஒரு நிலைமையா?