குளிர் காலத்திற்கு ஏற்ற மூலிகை தேநீர் வகைகள் மற்றும் பலன்கள்!!!

Author: Hemalatha Ramkumar
7 December 2022, 9:42 am

குளிர்கால நாட்களில் சூடான தேநீர் போன்றவற்றை குடிப்பது உங்களை சூடாக வைத்திருக்க உதவுகிறது. உடலை உள்ளே இருந்து சூடாக வைத்திருக்கும் சூடான பானங்கள் குளிர்காலத்துடன் தொடர்புடையவை. குளிர்ந்த மாதங்களில் பிரபலமான தேநீர் குறிப்பாக விரும்பப்படுகிறது. மசாலா டீ, கிரீன் டீ, லெமன்கிராஸ் டீ, சாமந்திப்பூ டீ, இஞ்சி டீ அல்லது வேறு ஏதேனும் மூலிகை தேநீர் என எதுவாக இருந்தாலும், தேநீர் நம் உணவில் தவிர்க்க முடியாத அங்கமாகும். குளிர்காலத்தில் மூலிகை தேநீர் ஏன் குடிக்க வேண்டும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

சளி மற்றும் இருமலை எதிர்த்துப் போராடுகிறது
குளிர்காலத்தில், பலருக்கு சளி அல்லது இருமல் இருக்கும். மேலும் சூடான தேநீர் பருகுவது நம்மை நன்றாக உணர உதவுகிறது. மசாலாப் பொருட்களுடன் கூடிய தேநீர் பொதுவான சளி மற்றும் இருமலுக்கு உதவும். ஒரு கப் இஞ்சி, மஞ்சள் அல்லது இலவங்கப்பட்டை தேநீர் வீக்கத்தைத் தணிப்பதன் மூலம் சளி அல்லது இருமல் அறிகுறிகளைப் போக்க உதவும்.

சீரான செரிமானம்
குளிர்காலத்தில், கனமான உணவுகளை உண்பது, அசையாமல் உட்காரும் போக்கு, உடல் உழைப்பை தவிர்ப்பது போன்றவற்றால் செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். ஒருவர் இஞ்சி டீ, புதினா அல்லது நட்சத்திர சோம்பு டீயை குடிக்கலாம். இது செரிமானம் மற்றும் இரைப்பை குடல் அசௌகரியத்திற்கு உதவும்.

இரத்த ஓட்டம்
குளிர்காலம் முழுவதும் செயலற்ற தன்மையால், நம் உடல் விறைப்பு அடைகிறது மற்றும் இரத்த ஓட்டம் தடைபடுகிறது. இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதுடன், இலவங்கப்பட்டை தேநீர் மற்றும் சாமந்திப்பூ தேநீர் குடிப்பது உள் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

வீக்கம்
வீக்கம் மற்றும் வலியைக் குறைக்க சூடான தேநீரை பருகலாம். குங்குமப்பூவுடன் மூலிகை டீ குடிப்பது அல்லது கொதிக்கும் நீரில் சில கிராம்புகளைச் சேர்த்து பருகுவது உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைக்கவும் வலியைக் குறைக்கவும் உதவும் என்று கூறப்படுகிறது.

ஆற்றலை அதிகரிக்கிறது
மசாலா டீயானது இயற்கையான ஆற்றல் ஊக்கியாக செயல்படுகிறது. ஏனெனில் இதில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் ஏராளமாக உள்ளதால் எந்த மோசமான பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?