மார்பக சுயபரிசோதனை எப்படி செய்யணும்னு உங்களுக்கு தெரியுமா???

Author: Hemalatha Ramkumar
2 June 2023, 10:48 am

மார்பக சுயபரிசோதனை என்பது மார்பகங்களில் ஏதேனும் மாற்றங்களைக் கண்டறிவதற்கான சிறந்த வழி. அதனை எவ்வாறு சரியாகச் செய்வது என்பதை அறிந்து கொள்வது அவசியம். இந்த பதிவில் மார்பக சுய பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம், அது குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை மற்றும் அதனை எப்படி செய்வது என்பது பற்றி பார்ப்போம்.

உங்கள் மார்பகங்களில் காணப்படும் மார்பக புற்றுநோயின் அறிகுறிகளைக் கண்டறிவதற்கு வழக்கமான மார்பக சுய பரிசோதனைகள் முக்கியம். புற்றுநோய்க்கான சிகிச்சை வெற்றிபெற அதனை ஆரம்ப கட்டத்தில் கண்டறிவது அவசியம்.
மார்பக சுய பரிசோதனை செயல்முறையை விளக்கும் பல பயனுள்ள வீடியோக்களையும், படங்களையும் ஆன்லைனில் காணலாம்.

மாதத்திற்கு ஒருமுறை உங்கள் மார்பக சுயபரிசோதனை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. மேலும் உங்கள் மாதவிடாய் முடிந்து குறைந்தது ஒரு வாரத்திற்கு பிறகு அதைச் செய்வது நல்லது.

நீங்கள் கர்ப்பமாக இருந்தால் அல்லது தாய்ப்பால் கொடுத்து வந்தாலும், நீங்களும் மார்பக சுய பரிசோதனையை செய்ய வேண்டும். ஆனால் அதைச் செய்வதற்கான சிறந்த நேரம் குறித்து உங்கள் மருத்துவரிடம் பேசுங்கள். இப்போது மார்பக சுய பரிசோதனையை எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்வோம்:-

  1. கண்ணாடியின் முன் நின்று, உங்கள் கைகளை பக்கவாட்டில் வைத்து உங்கள் மார்பகங்களைப் பார்ப்பதன் மூலம் தொடங்குங்கள். உங்கள் மார்பகங்களின் அளவு, வடிவம் அல்லது நிறத்தில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா எனப் பாருங்கள்.
  2. உங்கள் கைகளை உயர்த்தி, உங்கள் மார்பகங்களின் வடிவத்தில் ஏதேனும் மாற்றங்கள் உள்ளதா எனப் பாருங்கள்.
  3. உங்கள் கைகளை உங்கள் இடுப்பில் வைத்து உறுதியாக கீழே அழுத்தவும். உங்கள் மார்பகங்களின் அளவு அல்லது வடிவத்தில் ஏதேனும் மாற்றங்கள் தெரிகிறதா என்பதை கவனிக்கவும்.
  4. படுக்கும்போது, அக்குள் உட்பட முழு மார்பகப் பகுதியையும் மெதுவாக உணர உங்கள் விரல்களை தட்டையாக தடவவும்.
  5. வட்ட இயக்கங்களில் மீண்டும் மேலே உள்ள படிகளை செய்யவும்.
  6. நீங்கள் மார்பக சுயபரிசோதனையை முடித்த பிறகு, ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் விரைவில் உங்கள் மருத்துவரிடம் தெரிவிக்க வேண்டும்.

கவனத்திற்கு: எங்கள் இணையபக்கத்தில் பதிவிடப்படும் மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள் மற்றும் உடல்நலம் சார்ந்த விஷயங்களை மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகே செய்து பார்க்க வேண்டும் என அறிவுறுத்துகிறோம்.

  • madhavan talks about ncert syllabus going controversial எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?