10 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்..! கற்பழித்தவனே திருமணம் செய்து முத்தலாக் கொடுத்த கொடூரம்..!
23 August 2020, 11:46 amஉத்தரபிரதேசத்தில் நடந்த ஒரு அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில், ஒரு பத்து வயது சிறுமி தன்னை பாலியல் பலாத்காரம் செய்த நபரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த சிறுமிக்கு முத்தலாக் மூலம் விவாகரத்து கொடுக்கப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த மாத தொடக்கத்தில் புதனா காவல் நிலைய பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் குழந்தை பராமரிப்பு ஹெல்ப்லைனைச் சேர்ந்த ஒரு குழு, சிறுமியை ஆலோசனைக்காக பார்வையிட்டபோது இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது.
பிப்ரவரி 16’ஆம் தேதி பாலியல் பலாத்காரத்திற்குப் பிறகு பாதிக்கப்பட்ட சிறுமி, தனது சகோதரியின் மைத்துனருடன் திருமணம் செய்ததாக புனம் சர்மா என்ற ஹெல்ப்லைன் இன்சார்ஜ் தெரிவித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர், ஷாம்லி மாவட்டத்தில் வசிப்பவர் என்றும் பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் திருமணம் செய்த சிறுமியை முத்தலாக் செய்து ஆகஸ்ட் 4’ம் தேதி, சிறுமியின் பெற்றோர் வீட்டில் விட்டுச் சென்றார். இதையடுத்து உறவினர்களின் ஆலோசனையின் பேரில் குடும்பத்தினர் ஹெல்ப்லைனை அணுகினர்.
இதையடுத்து குழந்தை பராமரிப்பு ஹெல்ப்லைன் போலீசாருக்கு தகவல் கொடுத்தது.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளதாகவும், குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரணைக்கு அழைத்ததாகவும் புதனா காவல்நிலைய அதிகாரி கே.பி சிங் கூறினார்.
இதற்கிடையில், சிறுமியின் குடும்பம் தனது சகோதரியின் வற்புறுத்தலின் பேரில் தான் சிறுமியை திருமணம் செய்து வைத்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.