வெளிநாட்டு சிறைகளில் வாடும் இந்தியர்கள் இத்தனை பேரா..! மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்..!
4 February 2021, 7:47 pmஉலகெங்கிலும் உள்ள பல்வேறு சிறைகளில் மொத்தம் 7,139 இந்தியர்கள் கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர் என்று மத்திய வெளியுறவு இணையமைச்சர் வி.முரளீதரன் மாநிலங்களையில் தெரிவித்துள்ளார்.
“வெளியுறவு அமைச்சகத்திடம் கிடைத்த தகவல்களின்படி, 2020 டிசம்பர் 31’ஆம் தேதி நிலவரப்படி வெளிநாட்டு சிறைகளில் உள்ள இந்திய கைதிகளின் எண்ணிக்கை 7,139 ஆகும். இதில் பணியாளர்களும் அடங்குவர்” என்று ஒரு கேள்விக்கு பதிலளித்தார்.
பல நாடுகளில் நிலவும் வலுவான தனியுரிமைச் சட்டங்கள் காரணமாக, இதுபோன்ற விவரங்களை வெளியிடுவதற்கு சம்பந்தப்பட்ட நபர் ஒப்புக் கொள்ளாவிட்டால், உள்ளூர் அதிகாரிகள் கைதிகள் குறித்த தகவல்களைப் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள்.
“தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகள் கூட பொதுவாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டினரைப் பற்றிய விரிவான தகவல்களை வழங்குவதில்லை” என்று அவர் கூறினார்.
முரளீதரன் மேலும் இந்தியத் தூதரகம் மற்றும் வெளிநாடுகளில் உள்ள தூதரக அதிகாரிகள் விழிப்புடன் இருப்பதாகவும், உள்ளூர் சட்டங்களை மீறியதாகக் குற்றம் சாட்டப்பட்ட இந்தியர்கள் சிறையில் அடைக்கப்பட்ட சம்பவங்களை உன்னிப்பாகக் கண்காணிப்பதாகவும் கூறினார்.
“இந்திய சமூகம் கணிசமான எண்ணிக்கையில் உள்ள உள்ளூர் வழக்கறிஞர்கள் குழுவையும் தூதரகங்கள் பராமரிக்கின்றன.” என்று அவர் மேலும் கூறினார்.
அமைச்சர் அளித்த விவரங்களின்படி, பெரும்பான்மையாக 548 இந்தியர்கள் மலேசியாவில் உள்ள சிறைகளிலும், 536 பேர் குவைத் சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
0
0