இசை உலகில் 50 ஆண்டுகாலம் ஆதிக்கம் செய்த பம்பாய் சகோதரிகள் வீட்டில் துயரம் : சகோதரிகளில் ஒருவர் திடீர் மரணம்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 February 2023, 9:20 am
Bombay Sisters - Updatenews360
Quick Share

கேரள மாநிலம் திருச்சூரில் பிறந்த சகோதரிகள் சி.சரோஜா மற்றும் சி.லலிதா. இவர்கள் சிறு வயதிலேயே மும்பைக்கு குடிபெயர்ந்த நிலையில், பிரபல கர்நாடக இசை கலைஞரும், பாடகர் ஹரிஹரனின் தந்தையுமான ஹெச்.ஏ.எஸ். மணியிடம் கர்நாடக இசை பயின்றனர்.

இதனைத் தொடர்ந்து, சென்னைக்கு வந்து இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர்களை பம்பாய் சகோதரிகள் என்று அழைக்கப்பட்டனர்.

இவர்கள் இருவரும் இணைந்து கடந்த 50 ஆண்டுகளாக பல மொழிகளில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். இவர்களின் இசைப் பணிக்காக மத்திய அரசின் பத்மஸ்ரீ, தமிழக அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளனர்.

இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த லலிதா, செவ்வாய்க்கிழமை காலமானார். சென்னை பெசண்ட் நகர் இல்லத்தில் இவரது இறுதிச் சடங்கு இன்று நடைபெறுகிறது.

சென்னை ஐகோர்ட்டின் மூத்த வழக்கறிஞரும், தமிழக அரசின் முன்னாள் தலைமை வழக்கறிஞருமான என்.ஆர்.சந்திரன் இவரது கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 400

0

0