ஆந்திராவுக்கு வந்த ராகுல் காந்திக்கு காங்., நிர்வாகிகள் வரவேற்பு : சத்திரக்குடி ஆஞ்சநேயர் கோவிலில் தரிசனத்துடன் மீண்டும் பாத யாத்திரை!!

Author: Udayachandran RadhaKrishnan
18 October 2022, 1:57 pm

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜடோ யாத்திரை மேற்கொண்டு இருக்கும் ராகுல் காந்தி தற்போது ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் பாதயாத்திரை செய்து வருகிறார். கன்னியாகுமரியில் துவங்கிய ராகுல் காந்தியின் பாரத் ஜடோ யாத்திரை கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் வழியாக நடைபெற்று தற்போது ஆந்திராவில் தொடர்கிறது.

நேற்று இரவு வரை கர்நாடகாவில் பாதயாத்திரை மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி இன்று ஆந்திராவில் பாதயாத்திரை மேற்கொண்டு இருக்கிறார். கர்நாடகாவில் இருந்து ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஹல்காவால் கிராமம் வழியாக ஆந்திராவை பாரத் ஜடோ யாத்திரை இன்று ஆந்திராவை அடைந்தது.

தொடர்ந்து அருகில் உள்ள சத்திரக்குடி ஆஞ்சநேயர் கோவிலில் நடத்தப்பட்ட வழிபாட்டிற்கு பின் ராகுல் காந்தி பாதயாத்திரை தொடர்ந்து மேற்கொண்டு இருக்கிறார்.

ஆந்திராவில் இம்மாதம் 21ம் தேதி வரை 119 கிலோ மீட்டர் நடைபெற இருக்கும் பாரத் ஜடோ பாதயாத்திரை மீண்டும் கர்நாடகாவை அடைந்து அங்கிருந்து பின்னர் தெலுங்கானாவை அடைய உள்ளது.

இந்த நிலையில் பாதயாத்திரையாக ஆந்திராவிற்கு வந்த ராகுல் காந்தியை ஆந்திர மாநில காங்கிரஸ் கட்சியினர் சிறப்பாக வரவேற்று அவருடன் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளனர்.

  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்