கொரோனா, ஒமிக்ரான் பரவல் அச்சுறுத்தல் : நாளை முதல் நேரடி விசாரணை ரத்து.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan2 January 2022, 7:38 pm
டெல்லி : நாளை முதல் உச்சநீதிமன்றத்தில் காணொலி மூலம் மட்டுமே விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் காரணமாக உச்சநீதிமன்றத்தில் நாளை முதல் நேரடி விசாராணை ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால் நாளை முதல் அடுத்த 2 வாரங்களுக்கு உச்சநீதிமன்றத்தில் காணொலி மூலம் மட்டுமே விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வரும் 7 ஆம் தேதி முதல் காணொலி மூலம் விசாரணை நடத்த வேண்டாம் என உச்சநீதிமன்றம் அறிவித்திருந்தது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், உச்ச நீதிமன்ற பதிவுத்துறை இந்த முடிவு எடுத்துள்ளது.
Views: - 452
0
0