உயிருக்கு ஆபத்து.. முதலமைச்சர் பயணம் திடீர் ரத்து : அவசர அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 August 2022, 8:17 pm
Helicopter Bihar CM - Updatenews360
Quick Share

வறட்சி பாதித்த பகுதிகளை பார்வையிட முதல்வர் நிதிஷ்குமார் சென்ற ஹெலிகாப்டர் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

பீகார் மாநிலத்தின் அவுரங்காபாத், ஜெகனாபாத் , கயா ஆகிய மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவுகிறது. வறட்சி பாதித்த பகுதிகளை ஆய்வு செய்யவதற்காக முதல்வர் நிதிஷ்குமார் ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.

அப்போது மோசமான வானிலை காரணமாக நிலவரங்களை ஆய்வு செய்ய இயலவில்லை. இதையடுத்து ஹெலிகாப்டர் கயா மாவட்டத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது. இதனால், அசம்பாவிதம் எதுவும் நிகழவில்லை. அவரது பயணம் ரத்து செய்யப்பட்டது.

Views: - 364

0

0