லவ் ஜிகாத் சட்டத்தின் கீழ் முதல் எஃப்.ஐ.ஆர்..! உத்தரபிரதேச போலீசார் அதிரடி..!
29 November 2020, 1:11 pmலவ் ஜிகாத் எனும் திருமணத்தின் பேரில் கட்டாய மத மாற்றங்கள் குறித்து புதிதாக அறிவிக்கப்பட்ட அவசர சட்டத்தின் கீழ் முதல் எஃப்.ஐ.ஆர் உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று இரவு தியோரானியா காவல் நிலையத்தில் இதற்கான புகார் அளிக்கப்பட்டது. தியோரானியா போலீஸ் வட்டத்தின் கீழ் உள்ள ஷெரீப் நகர் கிராமத்தில் வசிக்கும் திகாராம், தனது கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளைஞர் தனது மகளை கவர்ந்ததாகவும், இப்போது அவரை மதமாற்றம் செய்ய நிர்பந்திப்பதாகவும் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தில் லவ் ஜிகாத் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டவரின் தந்தையிடமிருந்து புகார் கிடைத்ததையடுத்து காவல்துறையினர் இந்த வழக்கை பதிவு செய்தனர். தியோரானியா கிராமத்தில் வசிப்பவர் உவைஸ் அகமது மீது புகார் அளித்தார்.
அவர்கள் ஒன்றாக படிக்கும் போது, தனது மகளுடன் நட்பு கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இப்போது, அந்த நபர் தனது மகளை மதம் மாற்றி திருமணம் செய்து கொள்ளும்படி அழுத்தம் கொடுப்பதாகக் கூறி, பெண்ணின் தந்தை புகார் அளித்துள்ளார்.
நவம்பர் 24’ம் தேதி முதல்வர் யோகி ஆதித்யநாத் அமைச்சரவை அவசர சட்டத்தை நிறைவேற்றிய பின்னர், லவ் ஜிகாத் தொடர்பான குற்றங்களுக்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க முன்மொழியப்பட்டது.
பல்வேறு வகை குற்றங்களைக் கையாளும் சட்டத்தின் கீழ், ஒரு பெண்ணின் மதமாற்றம் திருமண நோக்கத்திற்காக மட்டுமே இருந்தால், அந்த திருமணம் செல்லாததாக அறிவிக்கப்படும். திருமணத்திற்குப் பிறகு தங்கள் மதத்தை மாற்ற விரும்புவோர் மாவட்ட ஆட்சியருக்கு முறையாக விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும்.
மேலும் இந்த புதிய சட்டத்தில் ஒரு சிறப்பம்சமாக, யாராவது தங்கள் தாய் மதத்திற்குத் திரும்பினால், அது ஒரு மாற்றமாக கருதப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
0
0
1 thought on “லவ் ஜிகாத் சட்டத்தின் கீழ் முதல் எஃப்.ஐ.ஆர்..! உத்தரபிரதேச போலீசார் அதிரடி..!”
Comments are closed.