விரைவில் திருமணம் : திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ராஜேஷ்… செல்ஃபி எடுக்க சூழ்ந்த ரசிகர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 February 2022, 2:43 pm

ஆந்திரா : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சுவாமி தரிசனம் செய்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை விஐபி தரிசனத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சாமி அவரது குடும்பத்தாருடன் தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்த பின் ரங்கநாயக மண்டபத்தில் தேவஸ்தானம் சார்பில் தீர்த்த, பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

கோயில் வெளியே வந்த அவர் எனது மேனேஜரின் திருமணம் ஆகியதால் திருப்பதிக்கு வந்துள்ளதாகவும் திருமணம் முடிந்தது சுவாமி தரிசனம் செய்வது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

கோயில் வெளியே ஐஸ்வர்யா ராஜேஷ் பார்த்த ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அங்கிருக்கும் போலீசாரிடம் செல்போனை வாங்கிக் கொண்டு அவரை செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

  • lokesh kanagaraj introduce as a hero in upcoming film லோகேஷ் கனகராஜ்ஜுக்கும் அந்த விபரீத ஆசை வந்திடுச்சா? விரைவில் எடுக்கப்போகும் புதிய அவதாரம்!