ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் என்கவுன்ட்டர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை…தொடரும் தேடுதல் பணி..!!

Author: Rajesh
21 April 2022, 4:40 pm
Quick Share

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையேயான துப்பாக்கிச்சூட்டில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் மால்வா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 4 ராணுவ வீரர்கள் மற்றும் பொது மக்கள் ஒருவர் காயமடைந்தனர்.

காயமடைந்தவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து நடந்த மோதலில், லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் யூசூப் கண்ட்ரோ உள்ளிட்ட இரு பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் மற்றும் பொது மக்களை சுட்டு கொன்றதில் இவருக்கு முக்கிய பங்கு உண்டு என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

அதே பகுதியில் மேலும் 3 பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாகவும் அவர்களை தேடும் பணிகள் தொடர்வதாகவும் காஷ்மீர் போலீஸ் ஐ.ஜி விஜய் குமார் தெரிவித்துள்ளார்.

Views: - 531

0

0