திடீரென ஐபிஎல்லில் இருந்து விலகிய ஹர்திக் பாண்டியா…? மீண்டும் கேப்டனாகிறார் ரோகித் ஷர்மா…? குஷியில் ரசிகர்கள்…!!

Author: Babu Lakshmanan
23 December 2023, 2:51 pm
Quick Share

மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் விடுவித்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை, மீண்டும் ட்ரேடிங் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குஜராத் அணியை இரண்டு ஆண்டுகளில் ஒரு சாம்பியன் பட்டம், ஒரு ரன்னர் பட்டம் வென்று கேப்டனாக செய்யப்பட்டு பாண்டியா வென்று கொடுத்திருந்த நிலையில், மீண்டும் மும்பைக்கு சென்றது விமர்சனத்துக்குள்ளானது.

ஹர்திக் பாண்டியாவை ரூ.15 கோடிக்கும் அதிகமாக விலை கொடுத்து மும்பை இந்தியன்ஸ் வாங்கியதாக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகின. மறுபக்கம், ரோகித் ஷர்மாவுக்கு பதில் மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தான் சரியான நபர் என நினைத்து மீண்டும் அவரை ட்ரேடிங் மூலம் மாற்றப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்த நிலையில், 2024ம் ஆண்டுக்கான 17வது சீசன் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இது ரோகித் ஷர்மாவின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து வருவதுடன், அந்த அணியின் ஜெர்சி மற்றும் தொப்பியை எரித்தும் தங்களின் எதிர்ப்புகளை தெரிவித்தனர். மேலும், மும்பை அணியின் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் ஆகிய சமூக வலைதளப்பக்கங்களை அன் ஃபாலோ செய்தும் தங்களின் எதிர்ப்புகளை வெளிக்காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், கணுக்கால் காயம் காரணமாக அடுத்தாண்டு நடக்கும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம், ரோகித் ஷர்மா மீண்டும் கேப்டனாக்கப்படுவார் என்று தெரிகிறது.

ஹர்திக் பாண்டியா விலகலை ரோகித் ஷர்மா ரசிகர்கள், கர்மா என விமர்சித்து வருகின்றனர்.

Views: - 621

0

0