வளர்ப்பு மகளை கர்ப்பமாக்கிய கொடூரத் தந்தை.. மருத்துவமனைக்கு ஊசி போடச் சென்ற போது வெளிப்பட்ட அதிர்ச்சி சம்பவம்!!

Author: Babu Lakshmanan
27 January 2023, 2:29 pm
Quick Share

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மலைவாழ் மக்கள் குடியிருப்பில் இருக்கும் மகள் முறையைச் சேர்ந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து கர்ப்பம் ஆக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு மலைவாழ் மக்கள் குடியிருப்பைச் சேர்ந்தவர் வெள்ளையன். இவர் ராமேஸ்வரம் பகுதியில் கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு வனக்காப்பாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால், தென்காசி மாவட்டம் புளியங்குடி தலையணை பகுதியைச் சேர்ந்த மேரி என்பவரை கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

மேரிக்கு நான்கு பெண் குழந்தைகள் மற்றும் மூன்று ஆண் குழந்தைகள் உட்பட ஏழு பிள்ளைகள் உள்ளனர். கடந்த ஒரு வருடங்களாக வேலையில்லாத வெள்ளையன் தனது இரண்டாவது மனைவி மேரி மற்றும் அவரது குழந்தைகளுடன் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அத்திகோவில் என்ற பகுதியில் அமைந்துள்ள மலைவாழ் மக்கள் குடியிருப்பில் இருந்து வந்துள்ளார்.

அச்சமயத்தில் மேரியின் கடைசி மகளான 15 வயது சிறுமிக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்து அவரை கர்ப்பம் ஆக்கியுள்ளார். தற்செயலாக நேற்று அரசு மருத்துவமனைக்கு ஊசி போடச்சென்ற சிறுமியை சோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

தொடர்ந்து தகவல் அறிந்து ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு வந்த மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் மீனாட்சி சிறுமியிடம் விசாரணை நடத்தி ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வெள்ளையன் மீது புகார் அளித்துள்ளார்.

அவரின் புகாரையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வெள்ளையன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மகளின் உறவு முறையில் உள்ள ஒரு சிறுமியை அப்பா முறையில் உள்ள ஒரு நபர் கர்ப்பம் ஆக்கிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 402

0

0