ரத்த காயத்துடன் இறந்து கிடந்த சிறுமி… தோளில் தூக்கிக் கொண்டு அலைந்த தாய் : கடலூரில் அதிர்ச்சி!

Author: Udayachandran RadhaKrishnan
20 June 2025, 2:02 pm

கடலூரில் நடந்த உச்சக்கட்ட கொடூரமான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூரை சேர்ந்த பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதிக்கு 2 மகன், 2 மகள் உள்ளனர். பாலமுருகனுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்பதால் மூன்று குழந்தைகளை உறவினர் ஜீவா என்பவர் பார்த்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

இதையும் படியுங்க: இபிஎஸ் குறித்து மோசமான கார்ட்டூன்… திமுக ஐடி விங் மீது அதிமுக பரபரப்பு புகார்!

ஜீவா சித்தப்பா மகன் என்பதால் பாலமுருகனும் சம்மதித்துள்ளார். திண்டிவனத்தில் உள்ள ஜீவா வீட்டில் மகன் மற்றும் 2 மகளுடன் பச்சையம்மாளும் இருந்துள்ளார்.

இந்த நிலையில், இளையமகள் 4 வயதான ரோஷினி என்பவர் இறந்துவிட்டதாக உறவினர்களுக்கு போன் செய்து கூறியுள்ளார் பச்சையம்மாள். இதையடுத்து பாலமுருகன் மற்றும் உறவினர்கள் அவரை கடலூர் வர கூறியுளள்னர்.

வருவதாக சொன்ன அவர், மாயமாகினார். இதையடுத்து உறவினர்கள் தேடும் போது, கடலூர் உழவர் சந்தை அருகே இறந்து போன மகளை தோளில் தூக்கி கொண்டு வந்த பச்சையம்மாளை உறவினர்கள் சுற்றி வளைத்தனர்.

4-year-old girl dies in sexual assault.. Mother and boy friend arrest

இது குறித்து பாலமுருகன் அளித்த புகாரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்து குழந்தயை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பிரேத பரிசோதனையில் குழந்தை கடுமையாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானது.

இதையடுத்து விசாரிக்கையில், ஜீவா பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. மேலும் சித்தப்பா மகனான ஜீவாவுடன் பச்சையம்மாளுக்கு தகாத உறவு இருந்துள்ளது தெரியவந்துள்ளது.

இதையடுத்து ஜீவாவை கைது செய்து கடலூர் அழைத்து வந்த போது, தப்பி ஓட முயன்ற ஜீவா கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குழந்தையை ஒரு வாரமாக தொடர்ந்து பாலியல் சித்ரவதை செய்தது தெரியவந்துள்ளது. குழந்தை கொலைக்கு உடந்தையாக இருந்த தாயையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

  • jana nayagan single on vijay birthday வெறித்தனமான அப்டேட்! விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி? 
  • Leave a Reply