கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தாக்கிய ஜிம் மாஸ்டர்… கோவையில் பரபரப்பு சம்பவம் ; 2 பேரையும் கைது செய்த போலீஸ்!!

Author: Babu Lakshmanan
30 March 2023, 10:05 pm
Quick Share

கோவை : கோவையில் கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை தாக்கிய ஜிம் பயிற்சியாளரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தியாகராய நகரைச் சேர்ந்த ஜிம் பயிற்சியாளர் கோபிநாத் (32) என்பவருக்கும், கார்த்தி (32) என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இருவருக்கும் குழந்தைகள் இல்லா நிலையில் வசித்து வருகின்றனர். இந்த சூழலில், உக்கடம் பகுதியில் உள்ள புல்லுக்காட்டைச் சேர்ந்த மகாலட்சுமி என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். இது தொடர்பாக கோபிநாத்தின் மனைவி கார்த்திக்கு விஷயம் தெரிய வரவே, அவர் தனது கணவரை கண்டித்துள்ளார். இருப்பினும், கள்ளக்காதலை அவர் கைவிட்டபாடில்லை.

இப்படியிருக்கையில், வேலைக்கு செல்வதாக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற கோபிநாத், மாலை நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. தொலைபேசியில் தொடர்பு கொண்ட போதும், அவரது அழைப்பை ஏற்கவில்லை. இதனால், சந்தேகமடைந்த கார்த்தி, கள்ளக்காதலியான மகாலட்சுமி வீட்டுக்கு கணவரை தேடி சென்றுள்ளார். அப்போது, வீட்டிற்குள் கோபிநாத் இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர், தன்னுடன் வீட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். ஆனால், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததுடன், மனைவியை கள்ளக்காதலியுடன் சேர்ந்து தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த கார்த்தியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், போலீசாருக்கும் தகவல் அளிக்கப்பட்டது.

அதன்பேரில் விசாரித்த போலீசார், கள்ளக்காதலி வீட்டில் இருந்த கணவரை அழைத்த இளம்பெண்ணை தாக்கிய அவரது கணவர் கோபிநாத் மற்றும் அவரது கள்ளக்காதலி மகாலட்சுமி ஆகியோர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Views: - 307

0

0