கிருஷ்ணசாமியிடம் முதல்வர் ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும் : உருவபொம்மை எரித்து புதிய தமிழகம் கட்சி போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
28 April 2022, 2:36 pm

திருச்சி : டாக்டர் கிருஷ்ணசாமியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி புதிய தமிழகம் சார்பில் ஸ்டாலின் உருவ பொம்மை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி உறையூர் நாச்சியார் கோவில் அருகில் புதிய தமிழக மாநில கொள்கை பரப்பு துணை பொதுச்செயலாளர் வாழையூர் குணா தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் திடீரென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வாழையூர் குணா, கடந்த 23ஆம் தேதி தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இன்றைய தேவை திராவிட மாடலா, தேசிய மாடலா என்ற ஒரு விவாதம் நடைபெற்றது.


இந்நிகழ்ச்சியில் தேசிய மாடல் என்ற தலைப்பில் கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது இமானுவேல் சேகரன் கொலைச் சம்பவம் மற்றும் வெண்மணி சம்பவத்தைக் குறித்து திராவிட கட்சிகள் என்ன செய்தீர்கள், மாஞ்சோலை தொழிலாளர்கள் போராட்டம் போது திமுக என்ன செய்தது, திமுக சமூகநீதி பேச என்ன அருகதை இருக்கிறது, தமிழகத்தில் நடந்த அத்தனை மனித உரிமை மீறல்களின் போது திமுக என்ன செய்தது என்ன சமூக நீதி என்ற நாடகத்தை, பொம்மலாட்டத்தை புதிய தமிழகம் கண்டிக்கிறோம் என்று பேசும்போது கருத்துக்கு கருத்து தெரிவிக்காமல் ஸ்டாலினுடைய ரவுடி ஆட்சியில் ரவுடிகளை ஏவி ஆயிரம் விளக்கு பகுதியை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் எழிலன் மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் குண்டர்கள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.

கிருஷ்ணசாமி பேசும்போது கூச்சலிட்ட திராவிட மாடலை சேர்ந்த ரவுடிகள் கைது செய்யும் வரையில் முதல்வர் ஸ்டாலின் கிருஷ்ணசாமியிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அதனை வலியுறுத்தி இன்று ஸ்டாலினுடைய உருவ பொம்மையை எரித்து புதிய தமிழகம் கண்டனத்தை பதிவு செய்து உள்ளோம் என தெரிவித்தார்.

  • supreme court said that thug life movie should not be ban for any cause படத்தை தடை செய்தது நியாயமா? தக் லைஃப்க்கு ஆதரவாக வந்த உச்சநீதிமன்ற உத்தரவு!