‘வங்கி மூலம்தான் பணத்தை தருவேன்’.. OLX-ல் வாகனத்தை விற்க முயன்றவருக்கு நேர்ந்த கதி.. பைக்குடன் பறந்த நூதன மோசடி மன்னன்..!!

Author: Babu Lakshmanan
17 February 2023, 6:05 pm
Quick Share

கோவை : சமூக வலைதளத்தில் வாகனம் விற்க விளம்பரம் செய்தவரை தேடி வந்து நூதன முறையில் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை போத்தனூரில் வசிப்பவர் முகமது ரபீக் . இவர் மொபைல் ஷாப் நடத்தி வருகின்றார். இவரிடமிருந்த தனது இருச்சகர வாகனத்தை விற்க olx இணைய தளத்தில் விளம்பரம் தந்திருக்கின்றார். இதனை பார்த்த ரமேஷ் என்ற நபர் தன்னை வங்கி ஊழியர் என அறிமுகப்படுத்தி, வாகனம் தேவைப்படுவதாக ஃபோனில் தெரிவித்திருக்கின்றார்.

வெரைட்டி ஹால் பகுதிக்கு வண்டியை கொண்டு வர வேண்டுமென கோரிக்கை விடுத்திருக்கின்றார். அதற்கு சம்மதித்த முகமது ரபீக் தனது இருசக்கர வாகனத்துடன் வெரைட்டி ஹால் ரோடு பகுதிக்கு சென்றிருக்கின்றார். இருசக்கர வாகனத்தை பரிசோதித்த ரமேஷ், வாகனம் நன்றாக உள்ளது எனக் கூறி அதனை வாங்கி கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

ஒருவழியாக பேரம் பேசி 98,000 ரூபாய்க்கு வாகனத்தை வாங்கி கொள்வதற்காக ரமேஷ் தெரிவித்துள்ளார். இதனைதொடர்ந்து தான் ரொக்கமாக தரமுடியாது, வங்கி கணக்கிலேயே பணத்தை செலுத்தி விடுவதாக ரமேஷ் தெரிவித்திருக்கின்றான். இதனை நம்பி முகமது ரபீக், ரமேஷை அழைத்து வங்கிக்கு சென்றிருக்கின்றார் .

அப்போது வங்கிக்கு வெளியே முகமது ரபீக்கை நிறுத்தி விட்டு வங்கிக்கு உள்ளே சென்ற ரமேஷ், பணம் கட்டியதற்கான ரசீதை எடுத்து வந்து முகமது ரபீக்கிடம் தந்திருக்கின்றார். வங்கி கணக்கில் பணம் வந்துவிட்டதாக எண்ணி முகமது ரபீக், ரசீதை பெற்றுகொண்டு, இருசக்கர வாகனத்தை ரமேஷிடம் ஒப்படைத்திருக்கிறார். வாகனத்தை எடுத்துக்கொண்டு அந்த நபர் அங்கிருந்தும் தப்பினார்.

பிறகு அந்த ரசீதை கொண்டு வங்கியில் தனது கணக்கை சரிபார்க்க சென்ற போது முகமது ரபீக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இந்த நிலையில் வங்கி மேலாளரிடம் கேட்டபோது அந்த பரிசீலனையே நடக்கவில்லை என தெரிவித்துள்ளார். போலீயாக சீலிட்டு வங்கி ரசீது போன்ற போலீயான ஒரு ரசீதை கொடுத்து ஏமாற்றியதை உணர்ந்த முகமது ரபீக், இது தொடர்பு முகமது ரபீக் வெரைட்டி ஹால் ரோடு காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் இருசக்கரவாகனத்தியுடன் தப்பிய நபரை தேடி வருகின்றனர்.

வழக்கமாக விளம்பரத்தை பார்த்துவிட்டு வருபவர்கள் வாகனத்தை ஓட்டிப் பார்க்க வேண்டும் என கூறி வாகனத்துடன் தப்புபவர்கள், தற்போது வங்கி ரசீதையே போலியாக தயார் செய்து கொடுத்து மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Views: - 343

0

0