கழுத்தை நெறித்த கடன் பிரச்சனை… சொந்த ஊருக்கு வந்த போலீஸ்.. விபரீத முடிவால் தவிக்கும் குடும்பம்!

Author: Udayachandran RadhaKrishnan
13 June 2024, 10:46 am

திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு பேருந்து ஓட்டுனர் ஆறுமுகம்‌ இவரது மகன் வினோத்குமார்‌(32).

இவர் சென்னையில் ஏ.ஆர்.போலீஸாக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி ரித்திக் சிவா (4) என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் இரண்டு நாள் விடுமுறைக்காக தனது சொந்த ஊரான கன்னிவாடிக்கு வந்துள்ளார். நேற்று குடும்ப பிரச்சனை மற்றும் கடன் பிரச்சனை காரணமாக வினோத் குமார் தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்தள்ளார்.

அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கன்னிவாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடன் பிரச்சனை காரணமாக போலீசார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்த தற்கொலை சம்பவம் குறித்து கன்னிவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

  • famous journalist criticize mani ratnam for muththa mazhai song ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…