விஜய் மக்கள் இயக்க நிர்வாகி மீது திமுகவினர் தாக்குதல்.. இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கி அட்டூழியம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 November 2023, 2:18 pm
Vijay Makkal - Updatenews360
Quick Share

நலத்திட்டம் வழங்கி விஜய் மக்கள் இயக்க நிர்வாகி மீது திமுகவினர் தாக்குதல்.. இருசக்கர வாகனத்தை அடித்து நொறுக்கி அட்டூழியம்!!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு 1வது வார்டில் வசித்து வருபவர் சபரி கிரி. இவர் கிணத்துக்கடவு விஜய் மக்கள் இயக்க நகர தலைவராக செயல்பட்டு வருகிறார்.

விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் பால், முட்டை, ரொட்டி ஆகியவை குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றது.

இதில் கிணத்துக்கடவு பகுதியில் 500″க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச பால், ரொட்டி,முட்டை, வழங்கப்பட்டு வந்துள்ள நிலையில் – கடந்த 11″ம் தேதி 40″ஆவது வாரமாக இந்த பால், ரொட்டி, முட்டை,வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

சம்பவத்தன்று அங்கு வந்த கிணத்துக்கடவு 1வது வார்டு திமுக செயலாளர் காளீஸ்வரன் மக்களுக்கான நலத்திட்டங்களை நீங்கள் செய்யக்கூடாது எனவும் அதை நாங்கள் தான் செய்ய வேண்டும் எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

தொடர்ந்து சபரி கிரியின் ஸ்கூட்டரை அடித்து உடைத்து சபரிகிரியைம் தாக்கியுள்ளார் என கூறப்படுகின்றது. திமுகவினர் தாக்கியதில் காயம் அடைந்த சபரிகிரி கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சம்பவம் குறித்து நேற்று முன் தினம் தீபாவளி தினத்தன்று புகார் தெரிவிக்க சபரிகிரி கிணத்துக்கடவு காவல் நிலையம் வந்திருந்த நிலையில் அதிகாரிகள் தீபாவளி பாதுகாப்பு ரோந்து பணியில் இருப்பதால் மறுநாள் வந்து புகார் அளிக்குமாறு தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து விஜய் மக்கள் இயக்க மாவட்ட இளைஞரணி தலைவர் பாபு தலைமையில் கிணத்துக்கடவு மேற்க்கு ஒன்றிய தலைவர் பழனிச்சாமி உட்பட ஏராளமான விஜய் ரசிகர்கள் ஒன்று திரண்டு வந்து நலத்திட்ட பணிகளை தடுத்து நிறுத்தி மக்கள் இயக்க நகர தலைவரை தாக்கிய காளீஸ்வரன் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்தனர்.

புகாரை பெற்றுக்கொண்ட காவல் நிலைய அதிகாரிகள் புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் விஜய் ரசிகர்கள் கிணத்துக்கடவு காவல் நிலையத்திலிருந்து கலைந்து சென்றனர்.

Views: - 238

0

0