‘லோன் எனக்கு வரல’ நிதியமைச்சர் முன்பு ஆவேசப்பட்ட நபர்.. கடனுதவி வழங்கும் விழாவில் சலசலப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
3 October 2023, 2:21 pm
Loan - Updatenews360
Quick Share

நிதியமைச்சரை முற்றுகையிட்டு லோன் தரவில்லை என கூறி ஆவேசப்பட்ட நபர்.. கடனுதவி வழங்கும் விழாவில் சலசலப்பு!

கோவை வந்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அந்தவகையில் கடனுதவி வழங்கும் விழா கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சதீஷ் என்ற நபர் திடீரென எனக்கு லோன் கிடைக்கவில்லை என மனவேதனைபட்டு வெளியேறினார். இதனால் விழாவில் திடீர் சலசலப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து நிகழ்ச்சியில் இருந்த அனைவரும் சதீஷை வரவழைத்து அவருக்கு ஏன் லோன் கிடைக்கவில்லை என்ன பிரச்சனை என நிர்மலா சீதாராமன் கேட்க உத்தரவிட்டார். பின்னர் மேடையில் மைக்கை கொடுத்து அவருடைய பிரச்சனை பற்றி கூற சொன்னார்.

இதையடுத்து நீங்கள் உங்களுடைய ஆவணங்களை கொடுங்கள் உங்களுக்கு கண்டிப்பாக கடனுதவி வழங்க உதவி செய்துத் தரப்படும் என்று கூறினார்.

Views: - 305

0

0