உங்க அரசியல் சண்டைக்கு நடிகை த்ரிஷா-தான் கிடைச்சாங்கலா..? ஏவி ராஜுவுக்கு பெப்சி கடும் கண்டனம்…!!

Author: Babu Lakshmanan
20 February 2024, 8:00 pm
Quick Share

உங்கள் அரசியல் பிரச்சனையில் திரையுலக பெண்கள் மீது ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தாதீர்கள் என்று முன்னாள் அதிமுக நிர்வாகி ஏவி ராஜுவுக்கு பெப்சி அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இன்றைய சமூக வலைதளங்களில்‌ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கப்பட்ட திரு.ஏவி ராஜீ என்பவர்‌ திரைத்துறையை குறித்து சில தரமற்ற, அவதூறுகளை கூறியிருக்கறார்‌. ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நடந்த போட்டியில்‌ 2017ல்‌ கூவத்தூரில் நடந்ததாக நடிகை த்ரிஷா அவர்களை சம்மந்தப்படுத்தி! ஒரு அவதூறு கூறியிருக்கிறார்‌.

அதுமட்டுமல்லாது பல நடிகைகள்‌ என்று பலரையும்‌, நடிகர்‌ திரு.கருணாஸ்‌ அவர்களையும்‌ சம்மந்தப்படுத்தி! இந்த கீழ்தரமான செய்தியை வெளியிட்டுள்ளார்‌.

அரசியலில்‌ ஒருவரை, ஒருவர்‌ தாக்கி கொள்வதற்கு அவர்களுக்கு பல்வேறு காரணங்கள்‌ இருக்கலாம்‌. ஆனால்‌ உங்கள்‌ அரசியல்‌ பிரச்சனையில்‌ தேவையில்லாமல்‌ ஆதாரமற்ற குற்றசாட்டுகளை கீழ்தரமான அவதூறுகளை திரையுலக பெண்கள்‌ மீது சுமத்தாதீர்கள்‌ என்று கேட்டுக்‌ கொள்கிறோம்‌.

இத்தகைய அநாகரிகமான கீழ்த்தரமான செயலை, தென்னிந்திய திரைப்படத்‌ தொழிலாளர்கள்‌ சம்மேளனம்‌ வன்மையாக கண்டிக்கிறோம்‌.

பஞ்சாயத்து தலைவரிலிருந்து, சட்டமன்ற உறுப்பினர்‌ முதல்‌ பாரத குடியரசின்‌ தலைவராக திருமதி.முர்மு அவர்கள்‌ வரை ஆட்சி அதிகாரத்தில்‌ இருக்கின்ற, இந்த பாரத தேசத்தில்‌ “பெண்கள்‌ மீதும்‌ அவர்களின்‌ பெண்மை மீதும்‌,” நடத்தப்படுகின்ற இம்மாதிரியான அவதூறு தாக்குதலை இரும்பு கரம்‌ கொண்டு களைய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்களுக்கு பணிவன்புடன்‌ வேண்டுகோள்‌ வைக்கின்றோம்‌,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Views: - 386

0

0