கோவிலுக்கு வரும் சிறுமிகளிடம் பாலியல் சீண்டல்… போலி சாமியாரின் காம லீலைகள்…!!

Author: Udayachandran RadhaKrishnan
29 August 2023, 2:30 pm

கோவிலுக்கு வரும் சிறுமிகளிடம் பாலியல் சீண்டல்… போலி சாமியாரின் லீலைகள்…!!

விழுப்புரம் நகர பகுதியான அன்னாநகரை சார்ந்த ரமேஷ் என்பவர் கோலியனூரில் உள்ள புத்துவாயம்மன் கோவிலில் தினந்தோறும் மாலை நேரங்களில் காவி உடைந்து சாமியார் போன்று சாமி தரிசனம் செய்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அப்படி கோவிலுக்கு வரும்போதெல்லாம் கோவிலுக்கு வரும் சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை ரமேஷ் வழக்கமாக கொண்டிருந்துள்ளார்.

இந்நிலையில் ரமேஷ் வழக்கம்போல் புத்துவாயம்மன் கோவிலுக்கு வருகை புரிந்து கோவிலுக்கு வந்த ஆறு வயது சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடவே சிறுமி தனது பெற்றோரிடத்தில் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர்கள் கோவிலுக்கு வருகை புரிந்த போலி சாமியார் வேடமணிந்து சிறுமிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சாமியாரை தர்ம அடி கொடுத்து வளவனூர் போலீசாரிடம் ஒப்படைதுள்ளனர்.

கோவிலில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட போலி சாமியாரை கோவிலுக்கு வந்தவர்கள் தர்ம அடி கொடுத்து காவல்துறையிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை? தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?