அரசு பள்ளி சமையல்கூடத்தில் மனிதக்கழிவு… புதுக்கோட்டையை தொடர்ந்து சேலத்தில் நடந்த கொடூர சம்பவம்!!!

Author: Udayachandran RadhaKrishnan
31 October 2023, 4:03 pm
School - Udpatenews360
Quick Share

அரசு பள்ளி சமையல்கூடத்தில் மனிதக்கழிவு… புதுக்கோட்டையை தொடர்ந்து சேலத்தில் நடந்த கொடூர சம்பவம்!!!

சேலம் மாவட்டம் மேட்டூத் அருகே காவேரிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்ள்ளியின் காலை உணவுத் திட்ட சமையல் கூடத்தில் கொடூர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

புதுக்கோட்டை வேங்கைவயலில் மேல்நிலை நீர் தேக்கத் தொட்டியில் நடந்தது போலவே இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. அதவாது காலை உணவுத் திட்ட சடையல் கூடத்தில் மனிதக்கழிவு பூசப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மேட்டூர் கோட்டாட்சியர் தணிகாசலம் தகவல் அறிந்து கொளத்தூர் வட்டாசியர் முருகன், காவல்துணை கண்காணிப்பாளர் மாரிமுத்து ஆகியோர் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து தூய்மை பணியாளர்கள் மூலம் சமையல் கூடத்தை தூய்மைப்படுத்தப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் புகார் அளித்ததன் பேரில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

இதுபற்றி கூறிய அப்பகுதி மக்கள், பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததாலும், இரவு நேர காவலாளி இல்லாததாலும் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர்.

Views: - 262

0

0