பாத்ரூமில் குளித்த இளம்பெண்… ரகசியமாக வீடியோ எடுத்த 15 வயது சிறுவன் ; சென்னையில் பகீர் சம்பவம்

Author: Babu Lakshmanan
9 August 2023, 8:48 am
Quick Share

சென்னையில் பாத்ரூமில் இளம்பெண் குளித்துக் கொண்டிருந்ததை வீடியோ எடுத்த 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை – வியாசர்பாடி எம்கேபி நகர் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் ஒருவர் ஐ.டி. கம்பெனியில் வேலை செய்து வருகிறார். நேற்று காலை 6 மணியளவில் பணிக்கு செல்வதற்காக, அந்த இளம்பெண் தனது வீட்டு குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது, யாரோ தன்னை வீடியோ எடுப்பதை உணர்ந்த அந்தப் பெண், தனது ஜன்னலை நோக்கி பார்த்துள்ளார். அந்த சமயம் பக்கத்து வீட்டில் வசிக்கும் 15 வயது சிறுவன் ஜன்னல் வழியாக இளம்பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதனை கண்ட இளம்பெண் சத்தம் போடவே அந்த சிறுவன் அங்கிருந்து ஓடிவிட்டார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

Views: - 376

0

0