‘நாடாளுமன்ற வேட்பாளர் ஜோதிமணி’… மறைமுகமாக காங்கிரஸ் தலைமைக்கு நெருக்கடி… சுவர் விளம்பரத்தால் செல்வப்பெருந்தகை அப்செட்..!!!

Author: Babu Lakshmanan
23 March 2024, 10:00 am
Quick Share

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியலை அறிவிக்காத நிலையில், கரூரின் பல்வேறு இடங்களில் “பாராளுமன்ற வேட்பாளர் ஜோதிமணி” என்று எழுதப்பட்டுள்ள சுவர் விளம்பரத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

திமுக பாராளுமன்ற தேர்தலுக்கான தொகுதிகளை இறுதி செய்து கூட்டணி கட்சி போட்டியிடும் தொகுதிகளை ஒதுக்கீடு செய்து நிறைவு செய்துள்ளது.

இந்த நிலையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. ஆனால் காங்கிரஸ் கட்சி தனது வேட்பாளர்கள் பட்டியலை நேற்று முன்தினம் இரவு வெளியிடுவதாக கூறியிருந்த நிலையில் தற்போது வரை பட்டியல் வெளியாகவில்லை.

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. கரூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்ட நிலையில், ஜோதிமணிக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படுமா? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில், வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதற்கு முன்பாக கரூரின் பல்வேறு பகுதிகளிலும், சோனியா காந்தி, தளபதி மு.க.ஸ்டாலின், செந்தில் பாலாஜி ஆதரவு பெற்ற வெற்றி வேட்பாளர் ஜோதிமணிக்கு கை சின்னத்தில் வாக்களிப்பீர் என்று சுவர் விளம்பரம் எழுதப்பட்டு வருகிறது. இதனால் கரூர் தொகுதியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கண்டிப்பாக ஜோதிமணியே என பொதுமக்கள் பேசி வருகின்றனர்.

Views: - 156

0

0