தமிழ்நாட்டுக்கு நிதி வாங்கித் தராத எல்.முருகன் தகுதியற்றவர்தான்.. சாதி அரசியல் செய்வதே பாஜகதான் : கி.வீரமணி ஆவேசம்!

Author: Udayachandran RadhaKrishnan
8 February 2024, 2:52 pm
Veeramani
Quick Share

தமிழ்நாட்டுக்கு நிதி வாங்கித் தராத எல்.முருகன் தகுதியற்றவர்தான்.. சாதி அரசியல் செய்வதே பாஜகதான் : கி.வீரமணி ஆவேசம்!

திருச்சி சிந்தாமணி அருகில் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக உள்ளிட்ட திமுக கூட்டணி கட்சியினர் உட்பட சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாநில உரிமைகள் மீதான தாக்குதல், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை நிதி பகிர்வில் வஞ்சிப்பது, ED, ஐ. டி போன்ற ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் மூலம் எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்குவது, அத்துமீறும் ஆளுநரையும், அடாவடி செய்யும் மோடி அரசையும் கண்டித்து கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.விரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர்கள், புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மாநில நிர்வாகி அஷ்ரப்அலி, மாசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர் மதிவாணன், இந்திய ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.

தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, தமிழகத்தில் திமுக 35 இடங்களில் வெல்லும் அதிமுகவை விட பாஜக அதிக வாக்குகள் பெறும் என ஒரு ஆங்கில நாளேடு குறிப்பிட்டுள்ளது என்ற கேள்விக்கு, ஒரு சிறு திருத்தம் 35சொல்லி இருக்கிறார்கள். ஆனால் பெட்டியை திறந்து பார்த்தால் 40ம் இருக்கும் இந்தியா முழுவதும் 400இருக்கும். கூட்டணி யூகங்கள் எல்லாம் தாண்டி இருக்கும் ஏனென்றால் மக்களுடைய வேதனை அந்த அளவுக்கு இருக்கிறது. தென்னாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் இருக்கிறது ஏனென்றால் மணிப்பூருக்கே போகாத ஒரு பிரதமரை பெற்று இருக்கிறோம் என மக்கள் எல்லாம் முடிவு செய்து இருக்கிறார்கள்.

எங்கள் பக்கம் வரமுடியாத தேர்தலே நடத்த முடியாத பிரதமர் இருக்கிறார் என காஷ்மீர் மக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். தென்னாடு பக்கம் வரவே முடியாது என்னால் வந்து ஷோ காட்டலாம். அண்ணாமலை வழி அனுப்பும் விழாவாக இருக்கும் அவ்வளவுதான்.

திமுக கூட்டணி கொள்கை அடிப்படையில் உள்ள கூட்டணி பதவிக்காக கூட்டணி அல்ல. பல சேர்வதற்காக கதவைத் தட்டி வருகின்றனர்.

கருத்து கணிப்பை தாண்டி சென்ற தேர்தலிலே இந்தியா முழுவதும் வென்று ஆட்சி அமைக்கும். ஊடகங்கள் மாற்றிச் சொன்னாலும் இது நடைமுறையில் இருக்கும். கருத்துக் கணிப்பை தாண்டி மக்கள் கணிப்பை பார்க்க வேண்டும்.

முருகன் தமிழ்நாட்டு அமைச்சராக இருந்தார். கோடான கோடி மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கையில் ஒரு ரூபாய் கூட பெற்று கொடுக்கவில்லை. மோடியிடம் பொங்கல் கொடுத்தால் மட்டும் போதாது அந்த நேரத்திலாவது பணம் வேண்டும் என கேட்டிருக்க வேண்டும். நாங்கள் தான் வாங்கிக் கொண்டு வந்தோம் என்று சொல்லி இருந்தால் அந்த பதவிக்கு தகுதி உள்ளவர். அது செய்யாதவரை தகுதி இல்லாதவர் எனக் கூறினார்.

இது ஜாதியை வைத்து அல்ல அவர் திறமையை வைத்தது செயலின்மையை வைத்து ஜாதி கலவரத்தை உண்டு செய்கிறார்களா, அடுத்த கட்டம் பாலு என்ன ஜாதி என்று ஆரம்பிப்பார்கள் மிக முக்கியம்.

தமிழகத்தில் உரிமை இருக்கும் போது ஜாதி இருக்காது. எதிர்க்கட்சிகள் இதனை செய்கிறார்கள் என அவர் சும்மா இருக்க வேண்டும். அதையும் செய்யாமல் இருக்கும்போது தான் அவர் இதை சொன்னாரே தவிர ஜாதியை வைத்து கூறவில்லை. இது சமூக நீதிப் பொறுத்த அல்ல இதையெல்லாம் நாங்கள் செய்தோம் என சொல்ல முடியாதவர்கள் ஜாதி என்பதுக்குள் புகுந்துள்ளனர். இதுதான் ஆர்.எஸ்.எஸ், மோடி, பிஜேபியின் உடைய வித்தை.நோக்கத்தை வேறு பக்கம் திசை திருப்புவார்கள் அதற்கு அடையாளம் தான். இதில் ஜாதி பிரச்சனையே கிடையாது.

இரண்டு கட்சிகள் தமிழகத்தில் எந்த கூட்டணி சேராமல் அவர்களுக்கு என்ன சொல்கிறீர்கள் என்ற கேள்விக்கு ஏலம் போடும் அரசியலை கொஞ்சம் மாற்ற வேண்டும் என தெரிவித்தார்.

Views: - 303

0

0