தவறான சிகிச்சையால் கால்பந்து வீராங்கனை பலி.. மாணவி உயிரிழக்க காரணம் இதுதான்…? அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன பகீர் தகவல்

Author: Babu Lakshmanan
15 November 2022, 11:18 am
Quick Share

தவறான சிகிச்சையால் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீராங்கனை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக இரண்டு மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த 17 வயது மாணவி பிரியா. கால்பந்து விளையாட்டில் அதிகம் ஆர்வம் கொண்ட இவர் தேசிய அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல சாதனைகளை படைத்துள்ளார். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டே, அங்கு கால்பந்து விளையாட்டில் பயிற்சியும் பெற்று வந்தார்.

அண்மையில் பயிற்சியின் போது தசைப்பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில், அவருக்கு காலில் தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது எக்ஸ்ரே மூலம் தெரியவந்து.

இதனை தொடர்ந்து, மருத்துவர்களின் பரிந்துரைப்படி தனது வீட்டின் அருகே உள்ள கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில், தசைப்பிடிப்புக்கு அறுவை சிகிச்சையும் செய்துள்ளனர். ஆனால் பிரியாவுக்கு காலில் வலி குறையவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் சிகிச்சைக்காக மீண்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அங்கு மாணவிக்கு மருத்துவர்கள் அடங்கி குழுவினர் செய்த பரிசேதனையில், காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில், ராஜீவ் காந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீரங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தங்களின் மகளின் இறப்புக்கு மருத்துவர்களின் அலட்சியமும், தவறான சிகிச்சையுமே காரணம் என்றும், மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது பெற்றோர் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், கால்பந்து வீரங்கனை பிரியா உயிரிழப்பு குறித்து விளக்கம் அளித்த மா.சுப்பிரமணியன் கூறியதாவது ; முதலில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வந்த மாணவி பிரியாவை வேறு மருத்துவமனைக்கு அனுப்பியது ஏன் என விசாரிக்கப்படும். என்ன தவறுகள் நடந்துள்ளது என்று விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

கால்பந்து வீரங்கனை பிரியா உயிரிழப்பு ஈடு செய்ய முடியாத இழப்பு. சிகிச்சையின்போது ரத்த நாளங்கள் பழுதானதால் பிரியாவில் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. சிகிச்சையின் போது ஈரல், இதயம் என உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டன. ரத்த நாளங்களில் ஏற்பட்ட பாதிப்பால் ரத்த ஓட்டம் நின்றுள்ளது. மூட்டு அறுவை சிகிச்சைக்காக போடப்பட்ட கட்டு காரணமாக வலி ஏற்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சைக்கு பின் காலில் போடப்பட்ட கட்டு அழுத்தமாக போடப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்த 2 மருத்துவர்கள் கவன குறைவால் வீராங்கனை மரணம் அடைந்துள்ளார். 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம்.மாணவியின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணமும், சகோதரர்களில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும். மருத்துவர்கள் இருவர் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது, எனக் கூறினார்.

Views: - 382

0

0