ஊமை ஜனங்கள காப்பாத்துங்க.. ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு… முதியவர் தீக்குளிப்பு : அரசு வாகனங்கள் மீது பொதுமக்கள் கல்வீச்சு!!

Author: Udayachandran RadhaKrishnan
8 May 2022, 11:51 am
Suicide Attempt - Updatenews360
Quick Share

சென்னை : மயிலாப்பூர் அருகே ஆர்ஏ புரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து முதியவர் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கோவிந்த சாமி நகர் இளங்கோ தெரு பகுதியில் கடந்த 29ஆம் தேதி முதல் நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு பணியில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆக்கிரமிப்புகளில் அமைந்துள்ள வீடுகளை இடிக்க நீதிமன்றம் உத்தரவு அளித்தும், பொதுமக்கள் வீடுகளை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று கண்ணையர் என்ற முதியவரின் வீட்டை அகற்ற பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டனர்.

அப்போது தனது வீட்டை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த அவர், உடலில் மண்ணென்ணை ஊற்றி தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்கள் மற்றும் இளைஞர்கள் முதியவரை மீட்டனர்.

சுமார் 40% தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்ட முதியவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள் அரசு வாகனங்கள் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியதால் பொதுப்பணித்துறை ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை நிறுத்தியுள்ளனர்.

தொடர்ந்து மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளதால் தற்காலிகமாக பணியை நிறுத்தியுள்ளனர். கடந்த 29ஆம் தேதியில் இருந்து ஆக்கிரமிப்பு பணி நடந்து வரும் நிலையில் பொதுமக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Views: - 727

0

0