மகன் இறந்தும் கூட வீட்டுக்கு வர மறுத்த தாய்… அழைக்க வந்த உறவினர்களை அடித்து விரட்டிய சோக சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
14 July 2023, 1:59 pm
Mother - Updatenews360
Quick Share

மகன் இறந்தும் கூட வீட்டு வர மறுத்த தாய்… அழைக்க வந்த உறவினர்களை அடித்து விரட்டிய சோக சம்பவம்!!

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள மறவபட்டி என்ற கிராமத்தில் வசித்து வந்த 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி அருள்மணி என்பவர் தனது இரண்டு மகன்களுடன் அதே ஊரில் வசித்து வந்துள்ளார் அதில் இளைய மகன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இருந்ததாக கூறப்படுகிறது.

இளைய மகன் இறந்த பின்பு அருள்மணி என்ற மூதாட்டி தாடிக்கொம்பு நகர் பகுதியில் தனக்கு ஆதரவாக யாரும் இல்லை என்று மனவளர்ச்சி குன்றியவர் போல வலம் வந்துள்ளார்

அதில் யாரேனும் பணமாகவும் உணவு உடைகள் என கொடுத்தால் வாங்கு கொண்டு தாடிக்கொம்பு பேருந்து நிறுத்தம் மற்றும் பாலம் உள்ளிட்ட இடங்களில் உறங்கிவந்துள்ளார்.

இந்நிலையில் இன்று ஒரு ஆட்டோவுடன் மூன்று ஆண்கள் வந்து அந்த மூதாட்டியை வா வீட்டிக்கு போகலாம் என அழைத்தனர்கள் அவர்களுடன் செல்ல மறுத்த மூதாட்டி ஒரு கட்டத்தில் விளக்கமாற்றை எடுத்து அடித்து விரட்டினர் இதனால் அப்பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் அக்கம்பக்கத்தினர் யார் நீங்கள் மூதாட்டியை எதற்காக அழைக்கிறீர்கள் என்று கேட்டபோது நாங்கள் அந்த மூதாட்டி அருள்மணியின் உறவினர்கள் என்றும் அவருடைய மூத்த மகன் ஜோசப்ராஜ் என்பவர் இறந்துவிட்டதாகவும் அவரது இறுதிச் சடங்கை பார்ப்பதற்காக மூதாட்டியை அழைக்கிறோம் என்று கூறினார்கள்.

தன் மகன் இறந்ததை சொல்லி அழைத்தும் செல்லாமல் மூதாட்டி பிடிவாதமாக இருந்ததை பார்த்த பலர் மூதாட்டிக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதால் போக மறுக்கிறாரா? அல்லது மகனால் கொடுமைகள் ஏதும் அனுபவித்தாரா அவருடைய இறப்புக்கு கூட செல்வதற்கு மருத்துவ வருகிறார் என்று பரபரப்பாக பேசி வந்த நிலையில் அந்த மூதாட்டி இடம் மற்றொரு பெண் எந்திரிச்சு போ இந்த இடத்தில் உட்கார வேண்டாம் என்று கட்டாயப்படுத்தும் போது என்னை அழைத்துச் செல்ல வந்தவர்கள் போகட்டும் அப்புறம் போகிறேன் என்று சைகையில் கூறியதில் மனநலம் பாதிக்கப்படவும் இல்லை என்று வெட்ட வெளிச்சமானது.

இருப்பினும் மகனுடைய இறப்பிற்கு செல்லாமல் பிடிவாதத்துடன் இருந்து வரும் மூதாட்டி யார் என்று பலரும் சந்தேகத்துடன் கேள்வி எழுப்பி சென்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது

Views: - 261

0

0