தாறுமாறாக சென்ற கார்.. தலைக்கேறிய போதையில் வாகனங்களை அடித்து தள்ளிய இளைஞர்கள்… புரட்டி எடுத்த பொதுமக்கள்!!!

Author: Udayachandran RadhaKrishnan
11 July 2023, 7:01 pm
Pondy - Updatenews360
Quick Share

புதுச்சேரி மாநிலத்திற்கு சுற்றுலாவிற்கு சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ஐந்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வந்திருந்துள்ளனர்.
இந்நிலையில் உப்பளம் பகுதியில் உள்ள பாண்டி மெரினா கடற்கரையில் மது அருந்திவிட்டு நிதானம் இல்லாமல் நகரப் பகுதியில் தாங்கள் வந்த காரை ஓட்டிச் சென்றுள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்திற்கு சுற்றுலாவிற்கு சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த ஐந்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் வந்திருந்துள்ளனர். இந்நிலையில் உப்பளம் பகுதியில் உள்ள பாண்டி மெரினா கடற்கரையில் மது அருந்திவிட்டு நிதானம் இல்லாமல் நகரப் பகுதியில் தாங்கள் வந்த காரை ஓட்டிச் சென்றுள்ளனர்.

அதனை தொடர்ந்து கார் நிற்காமல் சென்றதால் பொதுமக்கள் மற்றும் போலீசார் காரை சாலையில் துரத்தி சென்றனர். அண்ணசாலை வழியாக லாஸ்பேட்டை பருவடிக்குப்பம் வரை சென்று கார் சாலையோரம் சென்ற வாகனங்களை மோதிவிட்டு சென்றனர்.

அதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர் அந்த காரை விரட்டி சென்றனர். கருவடிக்குப்பம் ஏர்போர்ட் பின்புறம் சென்றபோது காரை மடக்கி பிடித்தனர். பொதுமக்கள் காரில் மது போதையில் இருந்த இளைஞர்களை தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இதனால் புதுச்சேரி நகரப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இரண்டு பேர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கார் சாலையில் செல்வோரை இடித்துச்செல்வதும், போலீசாரும், பொதுமக்களும் விரட்டி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Views: - 1267

0

0