கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்த சிறுமி.. தேனி நகராட்சியின் அலட்சியம்… வெளியான அதிர்ச்சி சிசிடிடிவி காட்சிகள்..!!

Author: Babu Lakshmanan
5 May 2023, 5:18 pm

தேனி நகராட்சியின் அலட்சியத்தால் கழிவு நீர் கால்வாயில் தவறி விழுந்த சிறுமியை உரிய நேரத்தில் கால்வாயில் குதித்து மீட்ட பொதுமக்களின் செயல் குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

தேனி பங்களாமேடு பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் அருகே கீர்த்தனா என்கிற நான்கு வயது சிறுமி விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த சிறுமி கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்தது. இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் கத்தி கூச்சலிட்டு சிறுமியை மீட்க முயற்சி செய்தனர். அப்போது அருகில் இருந்த இளைஞர்கள் சிலர் ஓடிவந்து கழிவு நீர் கால்வாயில் மூழ்கிய சிறுமியை துரிதமாக செயல்பட்டு மீட்டெடுத்து சிறுமியின் உயிரை காப்பாற்றினர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் சிசிடிவி காட்சி வெளியாகி தற்போது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
தேனி நகரின் கொட்டக்குடி ஆற்றில் இருந்து பழைய பேருந்து நிலையம் வழியாக செல்லப்படும் ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டுள்ள நிலையில், அதனை அகற்றி முறையாக தூர்வாரப்படாததால் கழிவு நீர் கால்வாயாக மாறி பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், முறையாக தடுப்புச் சுவர் ஏற்படுத்தாமல் இருப்பதால் சிறுவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக விளங்கி வருகிறது.

இது குறித்து தேனி நகராட்சி நிர்வாகத்தினரிடம் பல ஆண்டுகளாக புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். நகராட்சியின் அலட்சியத்தால் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதாகவும், மேலும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் நகராட்சி நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்புகளை அகற்றி வாய்க்காலை முறையாக தூர்வாரி தடுப்புச் சுவரை எடுப்ப வேண்டும் என அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.

  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்