ஆட்சிக்கு வந்த 10 நாட்களில் இப்படியா..? தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயல்… ஜி.கே வாசன் கண்டனம்!!

Author: Babu Lakshmanan
1 June 2023, 10:00 pm
gk vasan - updatenews360
Quick Share

மேகதாது அணை பிரச்னை என்பது பல்வேறு மாவட்டங்களுக்கு பயிர் பிரச்சனை மட்டுமல்ல, அது உயிர் பிரச்னை என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே வாசன் கூறியுள்ளார்.

தூத்துக்குடியில் பாஜக நிர்வாகியின் திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:- புதிய பாராளுமன்ற திறப்பு விழா வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சி. பாராளுமன்ற உறுப்பினருக்கும் புதிய பாராளுமன்ற திறப்பு விழாவிற்கு வருகை புரிந்து அந்த விழாவில் கலந்து கொண்டது தங்களை தேர்ந்தெடுத்த பாராளுமன்றத்தினுடைய வாக்காளர்களுக்கு நன்றி செலுத்தக்கூடிய நாள்.

அத்தகைய நல்ல வாய்ப்பை எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்து இருப்பது மிகுந்த வேதனைக்கும் வருத்தத்துக்கும் உரியது. தாங்கள் சார்ந்து இருக்கின்ற பாராளுமன்ற தொகுதி மக்களே வரும் நாட்களிலே அவர்களை புறக்கணிக்க கூடிய நிலை ஏற்படும் என்பதை அவர்கள் உணர வேண்டும். புதிய பாராளுமன்றம் என்பது வளர்ந்த நாடுகள் கட்டப்பட்டிருக்கின்ற பாராளுமன்றத்திற்கெல்லாம் சவால் விடும் வகையிலே, இந்திய பாராளுமன்றம் மிகச் சிறப்பான முறையிலே நம்முடைய வல்லுனர்களால் கட்டப்பட்டு இருக்கிறது.

சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த பாராளுமன்றம் ஒரு மைல்கள். இந்தியாவினுடைய வளர்ச்சிக்கு குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் பல மயில் தூரத்தில் இருந்து தங்களுடைய தொகுதி மக்களுக்கு சேவையாற்ற இந்தியாவினுடைய தலைநகரத்திலிருந்து வசதி பெற செயலாற்றுவதற்கு தொலைதொடர்பு வசதிகளோடு அமைக்கப்பட்டு இருக்கின்ற பாராளுமன்றம் இந்த பாராளுமன்றம்.

தொலைநோக்கு பார்வையோடும், பாரத பிரதமர், பாரதிய ஜனதா அரசும் இதை கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சி, தமிழகத்திற்கு தனி சிறப்பு வரலாற்று சிறப்புமிக்க செங்கோல் ஆகும். பாராளுமன்றத்திலே வைக்கப்பட்டிருக்கின்ற இத்தகைய செங்கோல் நேர்மையாக அதேபோல நெறி பிறழாமல் செயல்படுவதற்கு ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும், அதை பார்க்கும்போது அதை எடுத்துக்காட்டாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.

இப்படி வரலாற்று சிறப்புமிக்க செங்கோலை பற்றி அரசியல் காரணங்களுக்காக பல திரித்த தகவல்கள் தவறான தகவல்களை எதிர்க்கட்சிகள் கொடுத்துக் கொண்டிருக்கின்றனர் இது மக்களால் நிராகரிக்கப்படும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். மேகதாது அணை பிரச்சனை கேள்வி? மேகதாது அணை பிரச்னை காவிரி தண்ணீர் பிரச்சினை என்பது டெல்டா மக்களுக்கு மட்டுமல்லாமல் தமிழகத்திலே பல்வேறு மாவட்டங்களுக்கு பயிர் பிரச்சனை மட்டுமல்ல, அது ஒரு உயிர் பிரச்சனை என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

அப்படி இருக்கும் பட்சத்தில் மேகதாது அணையில் அணை கட்ட வேண்டும் என்று புதிய காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வந்த பத்து நாட்களிலேயே அறிவித்திருப்பது, ஏதோ தமிழகத்தினுடைய விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாக உள்ளது. இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. இது போன்ற நிலைக்கு கர்நாடக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். குறிப்பாக, இங்கே திராவிட முன்னேற்றக் கழற்றினுடைய ஆட்சியாளர்களும், அதனுடைய கூட்டணி கட்சிகள் காங்கிரஸ் உட்பட கர்நாடகா அரசுக்கு அறிவுறுத்த வேண்டும். தமிழகத்தினுடைய தேவை தண்ணீர் அதை தடுப்பதற்கு உண்டான எந்த முயற்சியும் அணைக்கட்டும் வகையிலே ஏற்படுத்தக் கூடாது என்பதை வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

முதல்வர் வெளிநாடு பயணம் என்பது விளம்பரத்திற்காக மட்டுமில்லாமல் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்பது மக்கள் எதிர்பார்ப்பு, வெளிநாடு சென்று இங்கே வந்த பிறகு ஒரு அறிக்கை வெளி வந்திருக்கிறது. அந்த அறிக்கைக்கு ஏற்றவாறு செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்பதுதான் மக்களுடைய எதிர்பார்ப்பாக இருக்கிறது. குறிப்பாக, புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எல்லாம் ஒரு காலக்கெடுக்குள் முடிவடைய வேண்டும். வேலை வாய்ப்பை இளைஞர்களுக்கு உறுதிப்படுத்த வேண்டும். தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்கள் பின்தங்கி இருக்கிறதோ, அது போன்ற மாவட்டங்கள் வளர்ச்சி பெற அங்கே புரிந்துணர் ஒப்பந்தம் போடக்கூடிய நிலையை அரசு ஏற்படுத்த வேண்டும் வெளிப்படை தன்மை என்பது மிக முக்கியமான ஒன்றாகும், என்றார்.

Views: - 307

0

0