உயிரை பணயம் வைத்து சடலத்துடன் ஆற்றை கடக்கும் அவலம் : வைரலாகும் ஷாக் வீடியோ… தமிழக அரசுக்கு கோரிக்கை!!

Author: Udayachandran RadhaKrishnan
4 December 2023, 5:46 pm
Villuuram - Updatenews360
Quick Share

உயிரை பணயம் வைத்து சடலத்துடன் ஆற்றை கடக்கும் அவலம் : வைரலாகும் ஷாக் வீடியோ… தமிழக அரசுக்கு கோரிக்கை!!

விழுப்புரம் அடுத்த கானைக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் நேற்று இரவு உடல்நிலை சரியில்லாமல் காரணத்தால் உயிரிழந்தார். தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அகர சித்தாமூர் பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடந்த 20 நாட்களுக்கு மேலாக பம்பை ஆற்றை கடக்க முடியாமல் விவசாயிகளும் பொதுமக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது அதே பகுதி சேர்ந்த ஆறுமுகம் என்பவர் நேற்று இரவு உகந்த நாள் அவரது உடலை நல்லடக்கம் செய்வதற்கு பம்பை ஆற்றை கடந்து செல்ல குடும்பத்தினர் அவதிப்பட்டு வருகின்றனர் எனவே உடனடியாக அந்த பகுதியில் ஒரு மேம்பாலம் அமைத்தால் விவசாயிகளுக்கும் அப்பகுதி உள்ள பொதுமக்களும் பயன்பெறுவார்கள்.

Views: - 471

0

0