விழுப்புரம் கொலை விவகாரத்தில் குற்றவாளிகள் மீது பாய்கிறது குண்டர் சட்டம்? அமைச்சர் பொன்முடி தகவல்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 April 2023, 1:23 pm
Villupuram - Updatenews360
Quick Share

கஞ்சா போதையில் இரண்டு நபர்களால் கத்தி குத்துப்பட்டு இறந்த பல்பொருள் அங்காடி ஊழியர் இப்ராஹிம் என்பவர் குடும்பத்திற்கு முதலமைச்சர் நிவாரண நிதியான ரூபாய் 2 லட்சத்திற்கான காசோலையை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவரது தாயாரிடம் வழங்கினார்.

விழுப்புரம் எம் ஜி ரோடு மார்க்கெட் பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் கடந்த 29ஆம் தேதி மாலை கஞ்சா போதையில் இரண்டு நபர்கள் அங்கு கடையில் இருந்த இப்ராஹிம் என்பவரை கத்தியால் குத்தி படுகொலை செய்தனர் இந்த சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து போதையில் இப்ராகிம் என்பவர் குத்தப்பட்டு இறந்த சம்பவத்திற்கு அரசு சார்பில் இழப்பீடு தொகையை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 2 லட்சம் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து இன்று காலை விழுப்புரம் வடக்கு தெருவில் உள்ள இப்ராஹிம் இல்லத்திற்குச் சென்ற உயிர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் இப்ராஹீம் அவர்களின் தாயார் மேகரணிசாவிடம் ரூபாய் 2 லட்சத்திற்கான காசோலை மற்றும் நகர திமுக சார்பில் ஒரு லட்ச ரூபாய் நிதியும் வழங்கினார்.

உடன் திமுக விழுப்புரம் மாவட்ட செயலாளர் மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினருமான புகழேந்தி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி, நகர மன்ற தலைவர் சர்க்கரை உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து இரண்டு லட்ச ரூபாய் நிதி அறிவிக்கப்பட்டு அதனை முதல்வர் கொடுக்க உத்தரவிட்டத்தின் பேரில் இன்று காலை நேரில் வந்து அவரது தாயாரிடம் இரண்டு லட்ச ரூபாய் காசோலையை வழங்கியதாகவும் மேலும் நகர திமுக சார்பில் ஒரு லட்ச ரூபாய் நிதியையும் வழங்கி உள்ளதாகவும் முதலமைச்சர் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொண்டதாகவும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ராஜசேகர் மற்றும் வல்லரசு ஆகிய இரண்டு நபர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் மூலம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Views: - 266

0

0