தமிழகத்தில் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு…சென்னையில் மட்டும் 590 பேருக்கு தொற்று!!

Author: kavin kumar
11 February 2022, 9:23 pm
Quick Share

சென்னை : தமிழகத்தில் இன்று 3,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்து 500க்கும் கீழ் குறைந்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 3,086 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரு நாள் பாதிப்பு 3,592 ஆக இருந்த நிலையில் இன்றைய கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 3,086 ஆக குறைந்துள்ளது.தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் இன்று ஒரு நாள் மட்டும் 25 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 37,887 ஆக உள்ளது.

அரசு மருத்துவமனையில் 11 பேரும் தனியார் மருத்துவமனையில் 14 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா சிகிச்சையில் இருப்போர் 56,002 ஆக உள்ளது. கொரோனா தொற்றிலிருந்து மேலும் 14,051 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 33,37,265 ஆக உள்ளது. .இதில் அதிகபட்சமாக சென்னையில் 590 பேருக்கும், கோவையில் 569 பேருக்கும், செங்கல்பட்டில் 261 பேருக்கும், திருப்பூரில் 193 பேருக்கும், சேலத்தில் 165 பேருக்கும், ஈரோட்டில் 154 பேர் என கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Views: - 947

0

0