சாதி விட்டு சாதி வந்து என் தங்கச்சியை திருமணம் செய்வியா… இளைஞரை படுகொலை செய்த அண்ணன் : நள்ளிரவில் பயங்கரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
25 February 2024, 10:41 am
chennai
Quick Share

சாதி விட்டு சாதி வந்து என் தங்கச்சியை திருமணம் செய்வியா… இளைஞரை படுகொலை செய்த அண்ணன் : நள்ளிரவில் பயங்கரம்!!

சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த பிரவீண் என்பவர் வீட்டிற்கு தெரியாமல் ஷர்மி என்ற பெண்ணை திருமணம் செய்து இருந்தார்.

4 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்த நிலையில், தற்போது ஷர்மியின் சகோதரர் தினேஷ், தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரவீணை கொலை செய்துள்ளார்.

பள்ளிக்கரணை மதுபான விடுதியில் நேற்று இரவு கொலை நடந்துள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். பெண்ணின் சகோதரர் மற்றும் நண்பர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளிக்கரணை பகுதியில் காதல் திருமணம் செய்த இளைஞர் ஆணவப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Views: - 120

0

0