வாய்க்கு வந்ததை பேசி வருகிறார் அண்ணாமலை… விஜயதாரணி கடைசி என்னிடம் கூறியது என்ன தெரியுமா..? செல்வப்பெருந்தகை சொன்ன தகவல்

Author: Babu Lakshmanan
7 March 2024, 3:51 pm
Quick Share

என்னிடம் ஒரு நாளுக்கு முன்னாள் கூட வையதாரணி கட்சியை விட்டு விலகமாட்டேன் என கூறியிருந்தார் என்றும், விஜயதாரணி பாஜகவில் இணைந்தது தொடர்பாக எங்களுக்கு எந்த விதமான விமர்சனங்களும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநில தலைவர் செல்வப் பெருந்தகை தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையிலுள்ள சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சியின் தமிழக மாநில தலைவர் செல்வப் பெருந்தகையின் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதற்கு முன்பாக ஆம் ஆத்மி கட்சியின் மாநில தலைவர் வசீகரன் செல்வப் பெருந்தகையை நேரில் சந்தித்து வாழ்த்து கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை கூறியதாவது :- கடந்த 10 ஆண்டுகளாக பாஜக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதை பதிவு செய்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் 2 நிமிட வீடியோ பதிவுகள் காட்சிப்படுத்தப்பட்டது.

நரேந்திர மோடி தமிழகத்திற்கு வரும்பொழுது அடுத்து வரும் 100 ஆண்டுகளுக்கு வேலை வாய்ப்பு திட்டங்கள் வகுத்துள்ளோம் என கூறியுள்ளார். அடுத்த 10 ஆண்டுகளுக்கான வேலை வாய்ப்பு திட்டங்களுக்கான பணிகள் தொடங்கியுள்ளோம் எனவும் கூறியிருந்தார். என்சிஆர்பி நாளொன்றுக்கு 30 பெண்கள் தற்கொலையில் ஈடுபட்டு வருகிறார்கள் என புள்ளி விவரங்கள் வெளியிட்டுள்ளது. மேலும், பாஜக அரசு பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் என கூறி இருந்த நிலையில், என்சிஆர்பியில் பாஜக மீது பெண்கள் சுமத்திய புகார்கள் 445 உள்ளது.

மேலும், அண்ணாமலை நாள்தோறும் பத்திரிக்கையில் வாய்க்கு வந்ததை பேசி வருகிறார். அதனை ஆதாரங்களுடன் எங்களது கண்டனங்களை தெரிவிக்கிறோம். ED, சிபிஐ, ஐடி துறைகள் வைத்து எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கம் கொண்டு 97 சதவீதம் புகார்களை நடவடிக்கை எடுக்கும்படி மோடி அவரது ஆட்சியில் செயல்பட்டு வருகிறார்.

கன்னியாகுமரி மதுரை தூத்துக்குடியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டோம். அங்கு இருந்த மக்கள் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் தேர்தல் பத்திரங்களில் வாங்கிய தேர்தல் நன்கொடையை பொதுவெளியில் பாஜக அரசு வெளியிட வேண்டும் என தீர்ப்பளித்தது, ஏன் பாஜக வெளியிடவில்லை என கேள்வி எழுப்பினர். இந்த நாடு வளங்களை அபகரிக்கும் நிறுவனங்களிடமிருந்து நன்கொடை மோடி பெறுவதால் தேர்தல் நன்கொடை வெளியிடாமல் உள்ளார்.

தேர்தல் முடிந்த பிறகு ஜூன் மாதம் தேர்தல் நன்கொடை பட்டியல் வழங்குவாத கூறுகிறார். தேர்தல் முடிந்த பின் அவர் ஆட்சியில் இருக்க மாட்டார். பின் அந்த நேரத்தில் ஏன் இந்த பட்டியல் வெளியிட வேண்டும். பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவும்படி எந்த நிதி உதவியும் கொடுக்கவில்லை. ஆனால் தற்போது தமிழகத்திற்கு வருகை அளித்து வாக்கு சேகரிக்கிறார்.

நீதிமன்றங்களில் வழக்காடு மொழியை தமிழ் மொழியாக மாற்ற வேண்டும் என வழக்கறிஞர்கள் போராடிய வருகிறார்கள். மாநில மொழியில் வழக்காடு மொழி மாற்ற வேண்டுமென காங்கிரஸ் ஒரு கோரிக்கையாக வைக்கிறது. ஓரிரு நாட்களில் தொகுதி பங்கீடு குறித்து இறுதி கட்ட முடிவெடுக்கப்படும். 40 தொகுதிகளில் வெற்றி பெறப் போறோம். அதனால் காத்திருந்து தொகுதி பங்கீடு குறித்து இறுதி கட்ட முடிவு எடுக்கப்படும்.

இன்றைக்கு சென்னையில் 3 மணிக்கு எஸ்பிஐ வங்கிக்கு முன்பாக போராட்டம் நடத்தப்படும். 40 தொகுதிகளில் வெற்றிபெற உள்ளோம். அதனால் காத்திருந்து ஓரிரு நாட்களில் தொகுதி பங்கீடு குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். புதிய வேளாண்மை சட்டத்தை ஏன் கொண்டுவரப்பட்டது. விவசாயிகளின் தோழன் என் கூறிக்கொள்ளும் மோடி ஏன் இந்த திட்டங்களை கொண்டு வந்தார்.

தொகுதி பங்கீடு இதுவரை மாநில கட்சிகளுக்கு முடிக்கவில்லை.மாநில கட்சிகளுக்கு தொகுதி பங்கீடுகள் முடிவு பெற்ற பிறகு வெளியிடப்படும். தொகுதி பங்கீடு குறித்து திமுக மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு இடையே எந்த விதமான பிரச்சனையும் இல்லை. என்னிடம் ஒரு நாளுக்கு முன்னாள் கூட விஜயதாரணி கட்சியை விட்டு விலகமாட்டேன் என கூறியிருந்தார். விஜயதாரணி பாஜகவில் இணைந்தது தொடர்பாக எங்களுக்கு எந்த விதமான விமர்சனங்களும் இல்லை.

குடும்ப அரசியல் செய்கின்றன. மத்திய அமைச்சர் எல். முருகன் வைத்து குற்றச்சாட்டுக்கு செல்வப் பெருந்தகை தேசிய காங்கிரஸ் கட்சி, தமிழக மக்கள் , இந்திய மக்கள் என அனைவரும் ஒரு குடும்பமாக உள்ளோம். இறுதியாக காட்சிகளில் பூ, பொன்னாடைகளை இனி தவிர்த்து விட்டு அதற்கு பதிலாக கட்சிக்கு நிதி வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

ஆனால் செய்தியாளர் சந்திப்பு முடிந்தஉடன் தொண்டர்களிடம் பூ பொன்னாடை பெற்று கொண்டார்.

Views: - 68

0

0