தமிழகத்தில் இன்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் பழனிசாமி
16 January 2021, 8:25 amமதுரை : மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்க இருக்கிறார்.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் சற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு பயன்படுத்திக் கொள்ள மத்திய அரசு அனுமதியளித்தது. இதையடுத்து, நாடு முழுவதும் தடுப்பூசி ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அது வெற்றி பெற்ற நிலையில், பாதிப்புகளுக்கு ஏற்றவாறு அனைத்து மாநிலங்களுக்கும் இந்த தடுப்பூசியின் டோஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
நாடு முழுவதும் இந்த தடுப்பூசி போடும் திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். அந்தந்த மாநிலங்களில் முதலமைச்சர்கள் தொடங்கி வைக்கின்றனர்.
தமிழகத்தில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்க இருக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் செல்லூர் ராஜூ, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கலெக்டர் அன்பழகன் ஆகியோர் மேற்கொண்டனர்.