அடுத்து அமைச்சர் பொன்முடிக்குத் தான் நெஞ்சு வலி.. அரசுக்கு தண்ட செலவு தான்… சிறையில் இருப்பவருக்கு சம்பளமா..? ஜெயக்குமார் கேள்வி..!!

Author: Babu Lakshmanan
19 July 2023, 5:02 pm
Quick Share

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முன்பாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு சுயேட்சை எம்பி என்ற அடிப்படையில் தான் ஓ‌பி.ரவிந்திரநாத் அழைக்கப்பட்டிருப்பார் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக சார்பில் நாளை நடத்த உள்ள விலைவாசி உயர்வுக்கான ஆர்ப்பாட்டம் குறித்தும், அதிமுக மாநாடு ஏற்பாடுகள் குறித்தும், புதிய உறுப்பினர் சேர்த்தல், புதுப்பித்தல் பணிகள் குறித்தும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ராயபுரம் பகுதியில் உள்ள கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது :- அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஒன்ரறை கோடி தொண்டர்கள் இருந்தார்கள். அதனை இரண்டு கோடி ஆக்க தமிழ்நாடு முழுவதும் உறுப்பினர் சேர்த்தல் மற்றும் புதுப்பித்தல் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல் பேரில் நடைபெற்று வருகிறது. புதிதாக ஒரு கோடியே 75 லட்சம் பேர் கழகத்தில் உறுப்பினராக சேர்ந்துள்ளனர்.

மதுரையில் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு இதுவரை இந்திய துணை கண்டமே சந்தித்திராத வகையில், மிகப்பெரிய எழுச்சி மாநாடாக நடத்த உள்ளோம். அது குறித்து இன்று மாவட்ட கழகத்தின் சார்பாக கலந்துரையாடல் கூட்டம் நடக்கிறது, எனக் கூறினார்.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இன்று மாலை நடக்க உள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்ள மத்திய அரசு சார்பில் எம் பி ரவீந்திரநாத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், NDA கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கப்பட்ட மரியாதை அனைவருக்கும் தெரியும். ரவீந்திரநாத்-க்கும், கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என்று ஏற்கனவே கடிதம் அனுப்பியுள்ளோம்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் முன்பாக அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்துக்கு சுயேட்சை எம்பி என்ற அடிப்படையில் தான் ஓ‌பி.ரவிந்திரநாத் அழைக்கப்பட்டிருப்பார். அதிமுகவுக்கும், ரவீந்திரநாத்க்கும் சம்பந்தம் இல்லை கடிதம் கொடுத்துள்ளோம், என தெரிவித்துள்ளார்.

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவது குறித்த கேள்விக்கு, “இயற்கை வளத்தை சுரண்டிய கொள்ளைக்கார கும்பல். ஏற்கனவே அவர் மகன் மீது ஒரு அமலாக்கத்துறை வழக்கு உள்ளது. முதலில் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி வந்தது. அடுத்து பொன்முடிக்கு ஆரம்பித்துள்ளது. அதற்கு பின் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நெஞ்சுவலி ஆரம்பிக்கும்.

ஒருவருக்கு தூக்கு தண்டனை கொடுத்து நாளைக்கே நிறைவேற்றி விட்டால், அது பெரிய தண்டனை இல்லை. ஒரு வருடம் கழித்து தண்டனை நிறைவேற்றினால் தூக்கம் இருக்காது, எப்போது சாவோம் என்று இருக்கும். அதேபோல் பொன்முடியை பொறுத்தவரை எப்போது கைதாக போகிறோம் என்ற எண்ணம் அவரை தூங்க விடாது.

எங்கள் நிலைப்பாட்டை பொருத்தவரை சிறைவாசம் மேற்கொள்ளும் சிறை கைதியை நீக்குவது தான் முறை. செந்தில் பாலாஜி இலக்கா இல்லாத அமைச்சராக வைத்திருப்பது அரசுக்கு தண்ட செலவு தான். துறையை பார்க்காமல் சிறையில் இருப்பவருக்கு சம்பளம் எதற்கு என்று கேள்வி எழுப்பினார்.

கர்நாடக கூட்டத்தில் காவிரி பற்றி முதலமைச்சர் பேசாததற்கு, முதலமைச்சருக்கு காவிரி பற்றி என்ன கவலை, பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வால் பாதிக்கப்படுகிறார்கள் அது பற்றி கவலைப்படுகிறாரா ? எனக்கே என் வீட்டில் தக்காளி சாதம் கேட்டால் செய்து தருவதில்லை, என்றார்.

இந்தியாவின் கொலை மாநிலம் தமிழ்நாடு கொலை நகரம் சென்னை என்றாகிவிட்டது. சட்டத்தை கையில் எடுப்பவர்கள் சட்டத்தை மதிக்காதவர்கள் தீவிரவாதிகள். காவல் துறையினர் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். எத்தனையோ வழக்குகள் சிறைச்சாலைகளை சந்தித்த ஒரே இயக்கம் அனைத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம். டாஸ்மாக்கை மேம்படுத்த விளக்கம் கொடுக்கிறார் முத்துசாமி. குடியை நியாயப்படுத்தி குடிகார நகரமாக மாற்றுகிறார்கள் .

இன்று கூட அலுவலகத்தில் கூட்டம் இருக்கும் நேரத்தில் மின்சாரத்தை துண்டித்துள்ளனர். எந்த அளவிற்கு அணில் வேலை செய்கிறது பாருங்கள், என்றும் பேசினார்.

Views: - 271

0

0